“அரசியலமைப்பை காக்க குடியரசு துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட விரும்புகிறேன்” – சுதர்சன் ரெட்டி
admin - 0
இந்திய அரசியலமைப்பைப் பாதுகாக்க குடியரசு துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட விரும்புவதாக இண்டியா கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது: “சமூகம் அதிகளவில் பிரிவினைகளை எதிர்கொண்டு வருகிறது. இது நிறுத்தப்பட வேண்டும், ஏனென்றால் ஜனநாயக நாட்டில் மிகப்பெரிய அச்சுறுத்தல் அரசாங்கங்களால் மட்டுமே வருவதில்லை, மாறாக மதம், சாதி, மொழி மற்றும் பிராந்தியத்தின் அடிப்படையில் சமூகத்தைப் பிரிக்க முயற்சிக்கும்போது, குடிமக்களிடமிருந்துதான் அச்சுறுத்தல்...
தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் சூர்ய காந்த், விக்ரம் நாத், ஜே.கே.மகேஸ்வரி, பி.வி.நாகரத்னா ஆகிய 5 உறுப்பினர்களை கொண்ட உச்ச நீதிமன்ற கொலீஜியம் நேற்று பிற்பகல் கூடி ஆலோசனை நடத்தியது. இதில் நீதிபதிகள் ஆலோக் ஆராதே, விபுல் எம்.பஞ்சோலி ஆகிய இருவரையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை அளித்துள்ளது. இந்தப் பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தால், குடியரசுத் தலைவர், இருவரையும் உச்ச நீதிமன்ற...
பங்குச் சந்தையில் லாபம் பெற்றுத் தருவதாக ரூ.5 கோடி மோசடி: உ.பி.யில் 14 பெண்கள் உள்ளிட்ட 43 பேர் கைது
admin - 0
லாபம் பெறுவதற்காக பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள் உண்டு. இதற்காக அவர்கள் பல்வேறு இடங்களிலிருந்தும் ஆலோசனை பெறுவது வழக்கம். இதைப் பயன்படுத்தி உ.பி.யின் வாராணசியிலிருந்து ஒரு கும்பல் இலவச ஆலோசனை வழங்குவதாக அறிவித்துள்ளது.
இதற்காக, அந்த கும்பல் உ.பி.யின் வாராணசியில் இரண்டு கால்சென்டர்களையும் நடத்தி வந்துள்ளது. இவர்கள் காட்டிய ஆசை வலையில் வீழ்ந்தவர்கள் தங்களது வங்கி மற்றும் டீமேட் கணக்குகளின் பாஸ்வேர்ட் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், ஒரு குறிப்பிட்ட...
‘நிக்கிக்கு நீதி வேண்டும்’… நாட்டை உலுக்கிய நொய்டா வரதட்சணை கொடுமை சம்பவம் – நடந்தது என்ன?
admin - 0
கிரேட்டர் நொய்டாவில் வரதட்சணை கொடுமையால், ஆறு வயது மகன் கண்முன்னே இளம்பெண் நிக்கி தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியைச் சேர்ந்தவர் விபின். இவர் கடந்த 2016-ம் ஆண்டு நிக்கி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 6 வயதில் மகன் உள்ளார். விபின் - நிக்கி திருமணத்தின்போது பெண் வீட்டார்...
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு ஒதுக்கப்பட்ட எம்பிபிஎஸ் இடங்களை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்திருப்பது அமலாக்கத் துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு (என்ஆர்ஐ) குறிப்பிட்ட சதவீதம் இடம் ஒதுக்கப்படுகிறது.
அதன்படி ஆண்டுதோறும் எம்பிபிஸ் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. இந்நிலையில், போலி ஆவணங்கள் மூலம் என்ஆர்ஐ ஒதுக்கீட்டு இடங்களில் வேறு மாணவர்களை சேர்த்திருப்பது அமலாக்கத்...
மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது: எஸ்எஸ்சி தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக கூறி ராம்லீலா மைதானத்தில் அமைதியாக போராட்டம் நடத்திய தேர்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது வெட்கக்கேடானது மட்டுமல்ல, அது ஒரு கோழைத்தனமான அரசாங்கத்தின் அடையாளம்.
வாக்குகளைப் பெறுவதற்காக அரசாங்கம் முதலில் தேர்தல்களில் மோசடிகளைச் செய்தது, பின்னர் தேர்வுகளில் முறைகேடுகளை அனுமதித்தது, அதைத் தொடர்ந்து வேலைகளை வழங்குவதில் தோல்வியடைந்தது,...
தெற்கு டெல்லி, மைதான் கார்கி பகுதியை சேர்ந்தவர் பிரேம் சிங். இவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக கிடைத்த தகவலின் பேரில் வீட்டை போலீஸார் நேற்று முன்தினம் சோதனையிட்டனர்.
இதில் நடுத்தர வயதுடைய பிரேம் சிங், அவரது மனைவி ரஜினி, 24 வயது மகன் ஹர்திக் ஆகிய மூவரும் கழுத்து அறுத்து கொல்லப்பட்டு கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் சடலங்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தடயங்களை சேகரித்து விசாரணை...
ஜம்மு காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்டம் சசோட்டி என்ற கிராமத்தில் கடந்த 14-ம் தேதி மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம் ஏற்பட்டது. இதில் சசோட்டி கிராமத்தின் பெரும் பகுதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. பலர் உயிருடன் மண்ணில் புதையுண்டனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மேலும் 4 பேரின் உடல்கள் மற்றும் துண்டிக்கப்பட்ட இரு கால்கள் மீட்கப்பட்டதை தொடர்ந்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளத்தில் காயம் அடைந்தவர்கள் 30 கி.மீ. தொலைவில்...
நாய் அசுத்தம் செய்த உணவை சாப்பிட்ட 84 மாணவர்களுக்கு ரூ.25,000: சத்தீஸ்கர் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
admin - 0
நாய் அசுத்தம் செய்த மதிய உணவைச் சாப்பிட்ட 84 மாணவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என்று சத்தீஸ்கர் மாநில அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் பலோடாபஜார்-படாப்புரா மாவட்டத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. அப்போது, மதிய உணவுத் திட்ட ஊழியர்கள், நாய் அசுத்தம் செய்த உணவை 84 மாணவர்களுக்கு வழங்கிவிட்டதாகத் தெரியவந்துள்ளது.
விவரம் அறிந்த பின்னர் அந்த...
‘இந்து தமிழ் திசை’ நாளேட்டில் செய்தி வெளியானதை தொடர்ந்து வெளிமாநில தமிழ்ச் சங்க பள்ளிகளுக்கு பாடநூல்களை தொடர்ந்து இலவசமாக அளிக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நாட்டின் பிற மாநிலங்களின் முக்கிய நகரங்களில் தமிழ்ச் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த சங்கங்களாலும் தமிழ் கல்வி அமைப்புகளாலும் நடத்தப்படும் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி மற்றும் தமிழ் பாடப்பிரிவுக்கு நூல்கள் தேவைப்படுகின்றன. இவை நீண்ட வருடங்களாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள்...










