பிஆர்எஸ் கட்சியை பாஜகவிடம் அடமானம் வைத்த கேசிஆர்: தெலங்கானா முதல்வர் ரேவந்த் குற்றச்சாட்டு
admin - 0
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் சட்டப்பேரவை தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் காங்கிரஸ், பாஜக, பிஆர்எஸ் கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் ஜூப்ளி ஹில்ஸ் சிறுபான்மையினர் சங்கத்தினர் நேற்று முதல்வர் ரேவந்த் ரெட்டியை சந்தித்து காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்தனர். அப்போது ரேவந்த் ரெட்டி பேசியதாவது:
ராகுல்காந்தி பாத யாத்திரை மேற்கொண்டபோது காங்கிரஸ் மட்டுமே சிறுபான்மையினர் நலனில் அக்கறை செலுத்தும் கட்சி என...
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தாய், ஆண் நண்பருக்கு 180 ஆண்டு சிறை தண்டனை: கேரள போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
admin - 0
கேரளாவில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், தாய், அவரது ஆண் நண்பருக்கு 180 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஒரு பெண் தன் கணவர் மற்றும் ஒரு பெண் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார்.
அப்போது, வேறு ஒரு ஆணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அந்தப் பெண் கணவரை விட்டுப் பிரிந்து ஆண் நண்பருடன் மலப்புரம் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் வசித்து...
ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு முதல்முறையாக இந்தியாவில் இருந்து சீக்கிய பக்தர்கள் பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளனர். அவர்களுக்கு பாகிஸ்தான் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்தும் மலர்களைத் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை அடுத்து, அதற்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் இந்தியா ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை எடுத்தது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்தது.
தற்போது இரு நாடுகளுக்கும் இடையேயான...
ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டம், முள்ளைய்ய பூடி மண்டலம், பண்டபல்லி எனும் கிராமத்தில் கிரிஜன ஆசிரம அரசு மகளிர் பள்ளி உள்ளது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை நூற்றுக்கும் அதிகமான மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், இப்பள்ளியில் பணியாற்றும் சுஜாதா எனும் ஆசிரியை, பாடம் சொல்லித் தரும் நேரத்தில் 2 மாணவிகளை அழைத்து, கால்களை பிடித்து விடச் செய்துள்ளார். அப்போது அந்த ஆசிரியை செல்போனில் பேசிக்கொண்டு...
சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாஸ்பூர் -கத்னி வழித்தடத்தில் லால் காதன் என்ற பகுதியில் சரக்கு ரயில் ஒன்று நேற்று மாலை நின்று கொண்டிருந்தது.
அதே வழித்தடத்தில் பிலாஸ்பூர் செல்லும் புறநகர் மின்சார ரயிலும் வந்தது. வேகமாக வந்த மின்சார ரயில், நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயங்கரமாக மோதியது. இதில் 8 பயணிகள் உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
ரயில் விபத்தில் உயிரிழந்தவர் களின்...
போக்சோ சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவது தொடர்பாக, ஆபாத் ஹர்ஷ்த் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இவரது மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், ‘‘வளர் இளம் பருவத்தினர் இடையே சம்மதத்துடன் நடைபெறும் உறவில் போக்சோ சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. போக்சோ சட்டப் பிரிவுகள் குறித்து சிறுவர், ஆண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த...
பிஹாரில் வரும் பொங்கல் பண்டிகையின்போது பெண்களுக்கு தலா ரூ.30,000 நிதியுதவி வழங்கப்படும் என்று ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்ஜேடி) முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
நவ. 6, 11 ஆகிய தேதிகளில் பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் ஆர்ஜேடி தலைமையிலான மெகா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. பிஹாரில் பெண்கள் சுய தொழில் தொடங்க பிஹார் அரசு...
தலைநகர் டெல்லியின் எல்லையிலிருந்து 40 கி.மீ. தொலைவில் ஹரியானாவின் பரிதாபாத் மாவட்டத்தில் உள்ள பல்லப்காரில் பயிற்சி வகுப்பு முடித்து மாணவி ஒருவர் தனது இரண்டு தோழிகளுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியில் இளைஞர் ஒருவர் கையில் பையுடன் இருசக்கர வாகனத்தில் காத்திருந்தார். அவரின் அருகே அந்த மாணவி வந்ததும் பின்தொடர்ந்து சென்ற அந்த இளைஞர் தனது பையில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மாணவியை நோக்கி சுட்டார்.
இதில், ஒரு...
பின்தொடர்வோரை அதிகரிக்க இந்து கடவுள்களுக்கு எதிராக அவதூறு ‘ரீல்ஸ்’ வெளியிட்ட சிறுமி: பெற்றோருக்கு சிறை
admin - 0
இன்ஸ்டாகிராமில் இந்து கடவுள்களுக்கு எதிரான ஓர் அவதூறு வீடியோ கடந்த 27-ம் தேதி வெளியானது. மைனர் பெண் ஒருவர் வெளியிட்ட அந்த ஒரு நிமிட வீடியோவில் இடம்பெற்ற இந்து கடவுள்களுக்கு எதிரான கருத்துக்கு பலர் ஆட்சேபம் தெரிவித்தனர்.
அந்த மைனர் பெண் மற்றும் அவரது குடும்பத்துக்கு எதிராக இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின. காவல் நிலையத்தில் புகார் அளித்தன. இதன் அடிப்படையில் மைனர் பெண்ணை உ.பி. போலீஸார் தடுப்பு காவல்...
மும்பை மாநகராட்சி முடிவால் ஒரு லட்சம் புறாக்கள் இறந்ததாக புகார்: ஜெயின் துறவி சாகும்வரை உண்ணாவிரதம்
admin - 0
மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் பல பகுதிகளில் புறாக்கள் ஏராளமாக உள்ளன. இவற்றுக்கு மும்பை நகர மக்கள் தானியங்கள் அளிப்பதும் வழக்கம். ஆனால், புறாக்களால் மும்பை நகர் அசுத்தமாவதாகவும் மனிதர்களுக்கு நுரையீரல் பாதிப்பு, சுவாச நோய் பரவுவதாகவும் புகார்கள் எழுகின்றன.
இதற்கு தீர்வு காண மகாராஷ்டிர அரசு, கடந்த ஜுலை 3-ம் தேதி முதல் 51 புறா கூடுகளை அப்புறப்படுத்தியது. தாதர் உள்ளிட்ட பல முக்கியப் பகுதிகளில் இருந்த புறாக்களின் கூடுகளை...










