Google search engine
ஐ-பேக் நிறுவனத்துக்கு எதிராக அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில் அதிரடியாக தலையிட்டு ஆவணங்களை எடுத்துச்சென்ற விவகாரத்தில் மேற்கு வங்க அரசு, முதல்வர் மம்தா பானர்ஜி, காவல்துறை ஆகியோருக்கு சம்மன் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசியல் ஆலோசனை நிறுவனமான ‘ஐ-பேக்’ நிறுவனத்தின் கொல்கத்தா அலுவலகம், அதன் இணை நிறுவனர் பிரதிக் ஜெயினின் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறை கடந்த 8ம் தேதி சோதனை நடத்தியது. கொல்கத்தாவின் லோடன் தெருவில் உள்ள பிரதிக்...
ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா ஆகியோர் இந்த ஆண்டு நடைபெறும் குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினர்களாகப் பங்கேற்கின்றனர். குடியரசு தின விழாவுக்காக ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் அழைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்த இரண்டு ஐரோப்பிய கவுன்சில் தலைவர்கள் ஜனவரி 25 முதல் ஜனவரி 27 வரை இந்தியாவுக்கு அரசு முறை பயணமாக வருகின்றனர். மேலும்,...
டெல்லி அரசு வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, 2024-ம் ஆண்டில் சுவாச நோய்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தைக் கடந்துள்ளது. தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்கள் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதை உறுதிப்படுத்தும் வகையில் புதிய புள்ளிவிவரங்களை டெல்லி அரசு வெளியிட்டுள்ளது. டெல்லி அரசு வெளியிட்டுள்ள 2024-ம் ஆண்டுக்கான பிறப்பு மற்றும் இறப்பு தரவுகளின் படி, கடந்த ஆண்டில் மட்டும் சுவாசம் தொடர்பான நோய்களால்...
மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை, புனே உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கான தேர்தல் நேற்று (ஜனவரி 15) நடைபெற்ற நிலையில், இன்று காலை 10 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது. நேற்று நடைபெற்ற தேர்தலில் ஒட்டுமொத்தமாக சுமார் 46% முதல் 50% வரை வாக்குகள் பதிவாகியுள்ளன. மும்பையில் 41% வாக்குகளும், புனேவில் 36.95% வாக்குகளும் பதிவாகின. இது 2017 தேர்தலை விட சற்று அதிகம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது....
ஜம்மு காஷ்மீரில் தீவிர​வாத குழுக்​களுக்​காகப் பணியாற்று​வ​தாக கண்​டறியப்​படும் அரசு ஊழியர்​களை துணை நிலை ஆளுநர் நிர்​வாகம் பணி நீக்​கம் செய்து வரு​கிறது. கடந்த 2021-ல் இந்த நடவடிக்கை தொடங்​கியது முதல் இது​வரை பல்​வேறு அரசுத் துறை​களைச் சேர்ந்த 85 ஊழியர்​கள் பணி நீக்கம் செய்​யப்​பட்​டுள்​ளனர். இந்​நிலை​யில் மேலும் 5 அரசு ஊழியர்​களுக்கு தீவிர​வாத தொடர்பு இருப்​ப​தாகக் கூறி, அவர்களை துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா நேற்று பணி நீக்​கம்...
தவெக தலைவர் விஜய் நடித்துள்ள கடைசிப் படம் 'ஜனநாயகன்'. கேவிஎன் நிறுவனம் தயாரிப்பில் ஹெச்.வினோத் இப்படத்தை இயக்கி உள்ளார். கடந்த 9-ம் தேதி உலகம் முழுவதும் இப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்த மத்திய தணிக்கை வாரியம், படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பியது. இதை எதிர்த்து படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி பி.டி.ஆஷா,...
அரசுப் பணி​யாள​ர்களுக்கு எதி​ராக ஊழல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசா​ரணை நடத்த அரசிடம் ஒப்​புதல் பெறு​வதை கட்​டாய​மாக்​கும் பிரிவை எதிர்த்த மனு மீது உச்ச நீதி​மன்​றம் மாறு​பட்ட தீர்ப்பை அளித்​துள்​ளது. இது தொடர்​பாக பொதுநல வழக்​காடு மையத்​தின் சார்​பில் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் பி.வி.நாக ரத்னா, கே.​வி.விஸ்​வ​நாதன் அடங்​கிய அமர்வு விசா​ரித்​தது. அப்போது, நீதிபதி பி.​வி.நாகரத்னா கூறிய தீர்ப்​பில், “அரசுப் பணியாள​ருக்கு எதி​ராக ஊழல்...
“​ஜனநாயகன் திரைப்​படத்​துக்கு தணிக்கை சான்று வழங்​காமல் தடுப்​பது, தமிழ் கலாச்​சா​ரத்​தின் மீதான தாக்குதலாகும்” என்று மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் குற்றம் சாட்​டி​யுள்​ளார். நடிகர் விஜய் நடித்த ‘ஜன​நாயகன்’ திரைப்​படம் கடந்த 9-ம் தேதி வெளி​யிடப்​படும் என்று அறிவிக்​கப்​பட்​டது. ஆனால், இந்​தப் படத்​தில் ஆட்​சேபனைக்​குரிய கருத்​துகள் இருப்​ப​தாக கூறப்​படு​கிறது. இதற்கு தணிக்கை சான்று வழங்​கு​வ​தில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பட வெளி​யீடு தள்ளி வைக்​கப்​பட்​டுள்​ளது. இந்​நிலை​யில், ஜனநாயகன் படத்​துக்கு தணிக்கை சான்​றிதழ்...
தங்​களது பணி​யாளர்​கள் மீதான அழுத்​தத்தை போக்கும் வகை​யில் 10 நிமிடங்​களுக்​குள் வாடிக்கையாளர்களுக்கு பொருட்​களை கொண்டு சேர்க்​கும் திட்டத்தை ஜெப்​டோ, சோமாட்டோ, ஸ்விக்கி போன்ற நிறுவனங்கள் நிறுத்தி வைக்க முடிவு செய்துள்​ளன. ஆன்​லைன் உணவு விநியோக நிறு​வனங்​கள் அதிக அளவில் வாடிக்​கை​யாளர்​களை கவரு​வதற்​காக விரைவு டெலிவரி திட்டங்களை செயல்​படுத்தி வரு​கின்​றன. அந்த வகை​யில், 10 நிமிடங்​களில் பொருட்​களை வாடிக்​கை​யாளர்​களிடம் கொண்டு சேர்க்​கும் திட்​டம் வாடிக்​கை​யாளர்​களிடையே மிக பிரபல​மாக உள்ளது. ஆனால், இந்த திட்​டம்...
காமன்வெல்த் நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் தலைமை அலுவலர்களின் 28-வது மாநாட்டை பிரதமர் மோடி வரும் 15-ம் தேதி டெல்லியில் தொடங்கி வைக்கிறார். இந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள 56 உறுப்பு நாடுகளில் 42 நாடுகள் இந்த மாநாட்டில் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கும் இந்த மாநாடு வரலாற்றிலேயே அதிகபட்ச நாடுகள் (61) கலந்து கொள்ளும் மாநாடாக இருக்கும் என்று மக்களைவை சபாநாயகர் ஓம்...