எதிரி நாடுகளின் விமானங்களை வீழ்த்தும் லேசர் ஆயுத சோதனை வெற்றி: முன்னணி நாடுகளின் பட்டியலில் இந்தியா
admin - 0
எதிரிநாட்டு போர் விமானங்கள், ஏவுகணைகள், ட்ரோன்களை நடுவானில் சுட்டு வீழ்த்தும் லேசர் அடிப்படையிலான ‘டி.இ.டபிள்யூ’ என்ற ஆயுத சோதனை டிஆர்டிஓ வெற்றிகரமாக மேற்கொண்டது. இதன்மூலம் இத்தகைய ஆயுதங்கள் வைத்திருக்கும் ஒரு சில நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பிடித்தது.
எதிரிநாட்டு போர் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை நடுவானிலேயே சுட்டு வீழ்த்த பல வகை ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் பயன்படுத்தப்படுகின்றன. துல்லிய தாக்குதலுக்கு லேசர் அடிப்படையிலான ஆயுதத்தை ஒரு சில முன்னணி...
ஆதரவற்றவர்களுக்கு சேவை செய்ய தவறிய வக்பு வாரியங்கள், முறைகேடுகளின் கூடாரங்களாக திகழ்கின்றன என பிஹார் ஆளுநர் ஆரிப் முகமது கான் கூறியுள்ளார்.
வக்பு சட்ட திருத்தம் குறித்து பிஹார் ஆளுநர் ஆரிப் முகமது கான் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: மதபாகுபாடு இன்றி ஏழைகள், ஆதரவற்றவர்கள், பின்தங்கியவர்கள் ஆகியோருக்கு உதவும் நோக்கத்தோடுதான் வக்பு வாரியங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், ஆதரவற்றவர்களின் தேவைகளை நிறைவேற்ற வக்பு வாரிய சொத்துக்கள் பயன்படுத்தப்படுவதில்லை. இங்கு சீர்திருத்தங்கள் நிறைவேற்றப்படாமல்...
மும்பை தாக்குதல் வழக்கில் தொடர்புடைய தஹாவூர் ராணாவுக்கு 18 நாட்கள் தேசிய புலனாய்வு அமைப்பின் 18 நாள் காவலில் வைக்க சிறப்பு என்ஐஏ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதல் வழக்கில் தொடர்புடைய தஹாவூர் ராணா (64) கடந்த 2009-ம் ஆண்டு அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். பாகிஸ்தானைச் சேர்ந்த அவரை இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய அரசுநடவடிக்கை மேற்கொண்டது.
இந்தியாவின் கோரிக்கையை ஏற்ற அந்நாட்டு உச்ச...
உறவினரின் கொலை வழக்கில் சாட்சி சொல்ல வந்த ராணுவ வீரரை ஒரு கும்பல் சுட்டுக் கொன்ற சம்பவம் உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: சஹரன்பூர் மாவட்டத்தில் உள்ள முடிகெடி கிராமத்தைச் சேர்ந்தவர் விக்ராந்த் குர்ஜார். இவர் ஜம்மு-காஷ்மீர் செக்டாரில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவர் உறவினர் கொலை வழக்கு ஒன்றில் சாட்சியம் அளிப்பதற்காக 4 நாட்கள் விடுமுறையில் கடந்த செவ்வாயன்று சொந்த...
பிரம்ம குமாரிகள் அமைப்பின் தலைவி தாதி ரத்தன் மோகினி மறைவுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரம்ம குமாரிகள் அமைப்பின் தலைமை நிர்வாகியாக இருந்தவர் தாதி ரத்தன் மோகினி(101). இவரது 100-வது பிறந்தநாள் கடந்த மாதம் 25-ம் தேதி கொண்டாடப்பட்டது. இவருக்கு கடந்தவாரம் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதனால் இவர் ராஜஸ்தானிலிருந்து, குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர்...
கடந்த 2020 ஏப்ரலில் பெண் ஒருவர் தனது மைத்துனிக்கு எதிராக புகார் அளித்திருந்தார். அப்புகாரில் அவர், “எனக்கும் எனது மைத்துனிக்கும் ஏற்பட்ட சண்டையில் அவர் என்னை கடித்தார்.
ஆபத்தான ஆயுதத்தால் எனக்கு தீங்கு விளைவித்தார்” என்று கூறியிருந்தார். இது தொடர்பாக மைத்துனி மீது இந்திய தண்டனை சட்டத்தின் 324-வது பிரிவின் கீழ் (ஆபத்தான ஆயுதத்தைப் பயன்படுத்தி காயப்படுத்துதல்) வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை மும்பை உயர் நீதிமன்றத்தின் அவுரங்காபாத் அமர்வு...
வாராணசி மாவட்ட ஆட்சியரும் தென்காசியின் கடையநல்லூர் தமிழருமான ராஜலிங்கம் ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் கூறியதாவது: ‘வாராணசியின் வளர்ச்சிக்காக, நாட்டின் பல்வேறு முக்கிய பொதுநல அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இடப்பட்டு பல திட்டங்கள் செயலாகின்றன. இந்த பட்டியலில் ஒன்றாக இம்மாவட்டத்தில் 356 கிராமப்புற நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், கிராமவாசிகள் படிக்கும் வகையில் நூல்களும், பயிற்சிபெறும் வகையில் இணையவசதிகளுடன் கூடியக் கணினிகளும் இடம்பெற்றுள்ளன.
கிராம நூலகங்கள் அமைக்க,...
வாராணசியில் ஊரக மேம்பாட்டு வளர்ச்சி திட்டங்கள் தொடங்கி வைக்கப்படவுள்ளன. இங்கு 130 குடிநீர்த் திட்டங்கள், 100 புதிய அங்கன்வாடி மையங்கள், 356 நூலகங்கள், பிந்ரா பகுதியில் ஒரு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அரசு கல்லூரி ஒன்றுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
ராம் நகர் பகுதியில் போலீஸார் தங்கும் விடுதி, மற்றும் நான்கு கிராம சாலைகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். சாஸ்திரி படித்துறை மற்றும் சாம்னே படித்துறை ஆகியவற்றில் ரயில்வே...
டெல்லி செங்கோட்டை, ஜாமா மசூதி வளாகங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. ஆனால் சோதனையில் இது புரளி என தெரியவந்தது.
டெல்லியில் உள்ள செங்கோட்டை மற்றும் ஜாமா மசூதி வளாகங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக காவல் துறையினருக்கு நேற்று காலையில் தொலைபேசி மூலம் தகவல் கிடைத்தது. இதையடுத்து, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், தீயணைப்புப் படையினர் மற்றும் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினர்....
பிஹாரில் நேற்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. அப்போது சீவான், பெகுசாரை, பாகல்பூர், ஜெகனாபாத், முஷாபர்பூர், சகர்ஷா, மதேபூரா, சாப்ரா உள்ளிட்ட பகுதிகளில் மின்னல் தாக்கி 28 பேர் உயிரிழந்தனர்.
பிஹாரின் நாளந்தா பகுதி, இஸ்லாம்பூரில் ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். விஷ்ணுபூர், நூர்சராய், செயின்புரா உள்ளிட்ட பகுதிகளில் சுவர் இடிந்து,...










