சுங்கான்கடை: புனித சவேரியார் கத்தோலிக்க கல்லூரிக்கு விருது
தொழில்நுட்பங்களை மாணவர்களுக்குக் கற்றுத் தருவதற்காக, தொழில் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டதற்காக, சுங்கான்கடை புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரிக்கு சிறந்த பொறியியல் கல்லூரிக்கான விருது வழங்கப்பட்டது. திருநெல்வேலியில் நடைபெற்ற விழாவில், மேங்கோபி நிறுவனத்தின் தெற்கு ஆசிய பிராந்திய மூத்த கூட்டாண்மை மேலாளர் இந்த விருதை கல்லூரி தாளாளர்...
தக்கலையில் பைக் விபத்து: எஸ்ஐ உட்பட 3 பேர் படுகாயம்
நாகர்கோவிலில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த கொற்றிக்கோடு போலீஸ் நிலைய எஸ்எஸ்ஐ தமிழ்செல்வன் (55), அவரது மனைவி அனி (48) மற்றும் கல்லூரி மாணவர் ஐசக் ரோஷன் ஆகியோர், தக்கலை அருகே கல்லூரி மாணவர் ஓட்டி வந்த மற்றொரு பைக் மோதியதில் பலத்த காயமடைந்தனர். அனைவரும் தனியார் மருத்துவமனையில்...
களியக்காவிளை: சிவபார்வதி கோயிலில் ஒண விழா
களியக்காவிளை செங்கல் சிவ பார்வதி கோயிலில் இன்று திருவோண விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. வழக்கமான பூஜைகளைத் தொடர்ந்து, கோயில் மண்டபத்தில் திருவோணத்திற்குத் தேவையான காய், கறி வகைகள், பழங்கள் உள்ளிட்டவை வரிசையாக வைக்கப்பட்டன. சிவன், பார்வதி அருளாசி வழங்கிய காய், கணி வகைகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன....
மார்த்தாண்டம்: நகராட்சிப் பணியாளருக்கு கத்திக்குத்து
குழித்துறை நகராட்சியில் பிளம்பிங் ஊழியராகப் பணிபுரியும் பிரகாஷ் (29) என்பவர், சென்னித்தோட்டம் அரசு மது பார் அருகே பைக்கை நிறுத்த முயன்றபோது, அதே பகுதியைச் சேர்ந்த தேவகுமார் என்பவர் கத்தியால் குத்தி படுகாயப்படுத்தியுள்ளார். காயமடைந்த பிரகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவகுமாரை கைது...
ஹாக்கர்புரம்: மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு, கல்வி உதவித்தொகை வழங்கல்
கேரள முதலி சிஎஸ்ஐ முன்னேற்ற சங்கத்தின் 34வது ஆண்டு விழா ஹாக்கர்புரம் சிஎஸ்ஐ ஆலயத்தில் நேற்று நடைபெற்றது. சங்கத் தலைவர் ஜான் மோகன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், போதகர் எஸ் வி உதய நிர்மல் சிங் துவக்கி வைத்தார். துணைத் தலைவர் டாக்டர் குணசீன் வேதநாயகம்...
நாகர்கோவில்: காற்றில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
சுசீந்திரம் மெயின் சாலையில் நேற்று மாலை பலத்த காற்றில் தென்னை மரம் முறிந்து வாகை மரக்கிளையில் விழுந்தது. இதனால் இரு மரங்களும் நடுச்சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த சுசீந்திரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, முறிந்து விழுந்த மரங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.
குமரியில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகம்
நாகர்கோவில் மாநகராட்சி 17, 21வது வார்டுக்கு கன்கார்டியா உயர்நிலைப்பள்ளி, குழித்துறை நகராட்சி வார்டு 3, 4, 5, 6 விஎல்சி ஆடிட்டோரியம், அழகப்பபுரம் பேரூராட்சிக்கு காமராஜர் திருமண மண்டபம், செறுகோல் ஊராட்சிக்கு ஆர்சி சமூக நலக்கூடம், கல்குறிச்சி ஊராட்சிக்கு கொல்லன் விளை அரசு நடுநிலைப்பள்ளி, மெதுவமல் ஊராட்சிக்கு...
இரணியல்: அம்மன் கோயிலை உடைத்து நகை, பணம் திருட்டு
இரணியல் அருகே சுனைப்பாறை மலை மீதுள்ள பத்ரகாளி அம்மன் மாடன் கோயிலில் இன்று காலை பூசாரி சரவணன் கோயில் நடை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். கோயில் நிர்வாகி ராமசாமி வந்து பார்த்தபோது, சுமார் 2 கிராம் தங்க தாலி மற்றும் உண்டியல் காணிக்கை...
குளச்சல்: விசைப் படகில் கணவாய் மீன்கள் குவிந்தது
குளச்சல் கடல் பகுதியில் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். நேற்று கரை திரும்பிய 20 விசைப்படகுகளில் கணவாய், தோட்டு கணவாய், ஆக்டோபஸ் போன்ற மீன்கள் அதிக அளவில் கிடைத்துள்ளன. கேரளாவில் ஓண பண்டிகை காரணமாக வியாபாரிகள் அதிக அளவில் மீன்களை...
பூதப்பாண்டி: பறவைகள் சரணாலயத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு
பூதப்பாண்டி வனச்சரகம் சார்பில், மாவட்ட வன அலுவலர் பிரசாந்த் உத்தரவின் பேரில், பறவைகள் சரணாலயத்தில் நேற்று மெகா பிளாஸ்டிக் ஒழிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. வனச்சரக அலுவலர் அன்பழகன், சமூக வனச்சர அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கப்பட்டது....













