வெள்ளிகோடு: சாலை தடுப்புச் சுவரில் மோதிய கனரக லாரி
குமரி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கிச் சென்ற கனகர லாரி வெள்ளிகோடு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து சாலை மைய தடுப்பில் மோதியது. லாரியின் முன்பக்க சக்கரங்கள் கழன்று தனியாக ஓடியது. இந்த விபத்தில் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை என்றாலும், சுமார் ஒரு...
குலசேகரம்: ஊருக்குள் புலி நடமாட்டம் – மக்கள் பீதி
குமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் ரப்பர் தோட்டங்களில் புலி நடமாட்டம் இருப்பதாக தகவல் பரவியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். தொழிலாளர்கள் வேலைக்கு செல்லும் போது புலிகள் சுற்றி திரிவதாக முதலில் தகவல் பரவியது. இரவில் மீண்டும் புலிகள் நடமாட்டத்தை கண்டதால் பீதி அதிகரித்துள்ளது. குலசேகரம் வனத்துறையினர் கால் தடங்களை...
மார்த்தாண்டம்: கார் மோதி கணவர் மனைவி படுகாயம்
சிதறால் பகுதியைச் சேர்ந்த சதீஷ் (44) மற்றும் அவரது மனைவி சுஜித்ரா (37) ஆகியோர் நேற்று (நவம்பர் 20) மார்த்தாண்டத்திலிருந்து ஆற்றூர் செல்லும் சாலையில் பைக்கில் சென்றபோது, எதிரே வந்த கார் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காரை...
அருமனை: தொடர்ந்து மது விற்ற பெண் கைது
அருமனை பகுதியில் மதுபானம் பதுக்கி விற்றதாக புண்ணியம் பகுதியை சேர்ந்த சுந்தரபாய் (56) என்பவர் 26 மது பாட்டில்களுடன் கடந்த 19ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இவர் மீது ஏற்கனவே பலமுறை மது விற்பனை செய்ததாக வழக்குகள் பதிவாகியுள்ளன. ஜாமினில் வெளியே வந்த சுந்தரபாய் நேற்று மீண்டும்...
கிள்ளியூர்: அதிமுக பூத் முகவர்கள் கூட்டம்
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இனயம் புத்தன்துறை, கொல்லங்கோடு, கருங்கல், முள்ளங்கினா விளை, திப்பிரமலை ஊராட்சி, பேருராட்சி பகுதிகளை உள்ளடக்கிய பூத் கமிட்டி அமைக்கும் பணிக்கான கூட்டம் நேற்று இனயயம் புத்தன்துறையில் நடைபெற்றது. மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயசுதர்சன் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், மாநில அமைப்பு...
நாகர்கோவிலில் ஆட்டோ டிரைவரை தாக்கிய 2 பேர் கைது.
நாகர்கோவில் ஒழுகினசேரி ஓட்டுபுரை தெருவில் வசிக்கும் ஆட்டோ டிரைவர் மணிகண்டனை, அனிஷ் என்பவரின் நண்பர்களான ஜெரின்ஜோஸ், ரமேஷ் ஆகியோர் கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். காயமடைந்த மணிகண்டன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக வடசேரி காவல் நிலையத்தில் மணிகண்டன் அளித்த புகாரின்...
குளச்சல்: நாளை உலக மீனவர் தினத்தில் போராட்டம் நடத்த முடிவு
கேரளாவில் தொழில் செய்யும் குளச்சல் சுற்றுவட்டார விசைப்படகு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உடமைக்கும் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் தாக்குதல்கள் நடைபெறுவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். கடல் அனைவருக்கும் சொந்தமானது என்பதை வலியுறுத்தி, நாளை உலக மீனவர் தினமான 21ஆம் தேதி, சைமன்காலனி மீன்பிடி...
குலசேகரம்: இயற்கை மருத்துவ முகாம் அமைச்சர் பங்கேற்பு
குலசேகரம் ஸ்ரீ ராமகிருஷ்ணா இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரி சார்பில் நடைபெற்ற இயற்கை மருத்துவ முகாமில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டார். அவர் இயற்கை மருத்துவம் குறித்த கண்காட்சியைப் பார்வையிட்டு, அதனைத் தயார் செய்த மாணவர்களைப் பாராட்டினார். மேலும், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளையும்...
குழித்துறை: முன்னாள் பிரதமர் இந்திரா பிறந்தநாள் விழா
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, குழித்துறையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் உள்ள நினைவு ஸ்தூபிக்கு குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் டாக்டர். பினுலால் சிங் தலைமையில் இன்று மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மேல்புறம் வட்டார...
பளுகல்: வீட்டை உடைத்து 17 பவுன் நகை கொள்ளை
பளுகல் அருகே வன்னியூர் பகுதியைச் சேர்ந்த கொத்தனார் ரவீந்திரன் (56) தனது குடும்பத்துடன் மகள் வீட்டிற்குச் சென்றிருந்தபோது, அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே இருந்த பீரோவில் இருந்த 17 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளன. இது குறித்து ரவீந்திரன் பளுகல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்....













