குளச்சல்: பிரபல கொள்ளயன் கைது 30 பவுன் நகைகள் மீட்பு
குமரி மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் வீடுகளில் புகுந்து தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தது. கொள்ளையர்களை பிடிக்க மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில் குளச்சல் டிஎஸ்பி (பொ) சந்திரசேகரன் மேற்பார்வையில், குளச்சல் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையில் தனிப்படையினர் அமைக்கப்பட்டு விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று தனிப்படையினர்...
தக்கலை: நள்ளிரவில் கண்டெய்னர் மோதி போலீஸ் படுகாயம்
தக்கலை அடுத்த புலியூர்குறிச்சி தேசிய சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் நெடுஞ்சாலை போலீசார் வாகனங்கள் சோதனையில் இருந்தனர்.
அப்போது கண்டெய்னர் லாரிகளையும் நிறுத்தி ஆவணங்களை சோதனை செய்தனர். இந்த நிலையில் நாகர்கோவில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற கண்டெய்னர் லாரி டிரைவர் போலீசை பார்த்ததும் வாகனத்தை திடீரென நிறுத்த...
மார்த்தாண்டம்: குப்பைகளை சாலையில் கொட்டிய கடைகளுக்கு அபராதம்
குழித்துறை நகராட்சி உட்பட்ட 21 வார்டுகளிலும் தினசரி குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு மக்கும் குப்பை, மக்காத குப்பை என வாகனங்கள் மூலம் சேகரிக்கப்படுகிறது. இவைகள் குப்பைக் கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு தரம் பிரிக்கப்படுகிறது.
இதற்காக ஷெட் கட்டப்பட்டு உயர்தரமான மிஷின் வாங்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் குப்பைகளை...
புதுக்கடை: கடன் தொல்லையால் பெண் விஷம் குடித்து தற்கொலை
புதுக்கடை வடக்குத்தெரு பகுதியை சேர்ந்தவர் தங்கப்பன். பெயின்டிங் தொழிலாளி. இவரது மனைவி சுதா (44). இவர்களுக்கு 11 மற்றும் 8-ம் வகுப்பு படிக்கும் மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் புதிதாக வீடு கட்டியதில் கடன் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதனால் சுதா மனவருத்தத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று...
அருமனை: நகை பட்டறை உடைத்து 4.5 கிலோ வெள்ளி திருட்டு
அருமனை அருகே மேல்புறத்தை அடுத்த வெங்கனம்கோடு பகுதி சேர்ந்தவர் பத்மநாபபிள்ளை. இவர் அந்த பகுதியில் நகை பட்டறை நடத்தி வருகிறார்.
கடந்த 14 ஆம் தேதி இரவு பணி முடிந்து பட்டறை பூட்டி சென்றார். நேற்று(டிச.16) காலை 10 மணி அளவில் பட்டறை திறக்க பத்மநாபபிள்ளை வந்தார். அப்போது...
மார்த்தாண்டம்: சாலைகளை சீரமைக்க கேட்டு பாஜக ஆர்ப்பாட்டம்
மார்த்தாண்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பல சாலைகள் படுமோசமாக காணப்படுகிறது. குறிப்பாக தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பதுங்கிவிட்டாலுமூடு, குழித்துறை, தக்கலை போன்ற பகுதிகளில் மரணக்குழிகளாக காணப்படுகிறது.
படுமோசமான இந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி பாரதிய ஜனதா சார்பில் மார்த்தாண்டம் பஸ் நிலையம் முன்பு நேற்று...
கொல்லங்கோடு: அரசு ஊழியர், கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது
கிள்ளியூர், வள்ளவிளை அருகே இடப்பாடு கடற்கரை பகுதியில் தனிப்படை போலீசார் இன்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வாலிபர்கள் உட்கார்ந்து இருப்பதை தனிப்படை எஸ்ஐ கண்டு, அருகே சென்று பார்த்தபோது 7 பேர் தலா ஐந்து கிராம் கஞ்சாவை கையில் வைத்துக்கொண்டு புகைத்துக்கொண்டு இருந்ததை கண்டனர்....
கொற்றிக்கோடு: கல்லூரி மாணவி மாயம் – போலீசில் புகார்
தக்கலை அருகே கொற்றிக்கோடு பகுதி சரல்விளையை சேர்ந்தவர் ஜெகன் ரத்தினராஜ். கடந்த 15 வருடங்களுக்கு முன்பு அவரது மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இவரது மகள் ஜென்சி (22) மற்றும் மகன் பாட்டியுடன் வசித்து வருகின்றனர். ஜென்சி நகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ....
குமரி: போதை பொருள் விற்பனை குறித்த தகவல் தெரிவிக்க வாட்ஸ் அப் எண்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மற்றும் தக்கலை மது விலக்கு அமலாக்க பிரிவு சார்பாக போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் குறித்த தகவல்களை பொதுமக்கள் 7010363173 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பும்படி குமரி ஆட்சியர் அலுவலக நுழைவாயில், பள்ளி கல்லூரி, கடற்கரை மற்றும் பொதுமக்கள் வந்து செல்லும்...
நாகர்கோவில் இந்திய நுகர்வோர் சங்கம் சார்பில் முப்பெரும் விழா
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள தனியார் அரங்கில் வைத்து இந்திய நுகர்வோர் சங்கம் சார்பில் முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமிர்தராஜ் வரவேற்புரை ஆற்றினார். தலைவர் அலோசியஸ் மணி தலைமை உரையாற்றினார். துணைத் தலைவர் முத்துக்குமார் முன்னிலையில் ராணி செல்வின் கருத்துரை எடுத்துரைத்தார். சிறப்பு விருந்தினராக...













