கர்நாடக முதல்வர் சித்தராமையா மீதான நில முறைகேடு வழக்கில் தொடர்புடைய ரூ.100 கோடி மதிப்பிலான 92 அசையா சொத்துகளை முடக்கி அமலாக்கத் துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்குச் சொந்தமான நிலத்தை கையகப்படுத்தியதற்காக, மைசூரு மாநகர மேம்பாட்டுக் கழகம் அவருக்கு மாற்று நிலம் ஒதுக்கியது. கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பை விட, மாற்றாக வழங்கப்பட்ட நிலத்தின் மதிப்பு அதிகமாக இருந்ததால் சர்ச்சை ஏற்பட்டது.
இதையடுத்து, சித்தராமையா, அவரது மனைவி...
கேங்ஸ்டர் ஆதிக் அகமதின் ரூ.50 கோடி சொத்துகள் உத்தர பிரதேச அரசுக்கு மாற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆதிக் மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது மீது 100-க்கும் மேற்பட குற்ற வழக்குகள் இருந்த நிலையில், உத்தர பிரதேச காவல் துறை இவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மருத்துவ பரிசோதனைக்காக இவர்களை காவல் துறை அழைத்துச் சென்றபோது, கூலிப்படையினர் இவர்கள் மீது துப்பாக்கிச்...
மறைந்த அஜித் பவார் மீதான வழக்குகளை ரத்து செய்வதே உண்மையான அஞ்சலி: எம்.பி.சஞ்சய் ராவத் கருத்து
admin - 0
மறைந்த மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அஜித் பவார் மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. புனே கூட்டுறவு வங்கித் தலைவராக இருந்த போது இவர் மீது ஊழல் புகார் எழுந்தது.
மேலும், வேளாண் துறை, மின்துறை, மண்வளப் பாதுகாப்பு என அனைத்து துறைகளிலும் இவர் மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகளும், வழக்குகளும் உள்ளன. இவர் மீதான ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் சிவ சேனா (உத்தவ் அணி) மாநிலங்களவை எம்.பி....
உத்தரபிரதேசத்தில் கோயிலை இடித்துவிட்டு கட்டியதாக பதான்யூ மசூதி மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்து மகா சபை தொடர்ந்த இந்த வழக்கு டிசம்பர் 3-ல் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுல்தான்கள் ஆட்சியிலிருந்த டெல்லியின் கீழ் பதான்யூ அமைந்திருந்தது. சுல்தான் வம்சத்தின் மன்னரான குத்புதீன் ஐபக்கிற்கு பின் அவரது மருமகன் இல்துமிஷ் டெல்லியை ஆட்சி செய்தார். அப்போது அவர் பதான்யூவில் பிரம்மாண்ட ஜாமா மசூதியை 1225-ல் கட்டினார். ஒரே சமயத்தில் 23,500...
ஆந்திர மாநிலத்தின் பிரகாசம் மாவட்டம், நரசிம்மாபுரத்தில் குடிநீர் திட்டத்துக்கு துணை முதல்வர் பவன் கல்யாண் நேற்று அடிக்கல் நாட்டினார்.
விழாவில் அவர் பேசியதாவது: 2029-ல் ஆட்சிக்கு வந்ததும் எங்களை ஒரு கை பார்ப்போம் என முன்னாள் முதல்வர் ஜெகன் அடிக்கடி மிரட்டி வருகிறார். சக மனிதர்களை இவ்வாறு மிரட்டியதால்தான் தனக்கு இந்த நிலைமை என்பதை ஜெகன் இன்னமும் புரிந்து கொள்ளவில்லை. மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்ட நிதியை முந்தைய ஜெகன்...
தற்போதைய 18-வது மக்களவையின் 74 பெண் எம்.பி.க்களில் அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் இருந்து 11 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தற்போதைய 18-வது மக்களவையில் மொத்தமுள்ள 543 உறுப்பினர்களில் 74 பேர் பெண்கள். இவர்களில் மேற்கு வங்கத்தில் இருந்து அதிகபட்சமாக 11 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். ஆண் எம்.பி.க்கள் 469 பேரில் உ.பி.யில் இருந்து அதிகபட்சமாக 73 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.
தேர்தலில் பெண்களின்...
தொழிலதிபர் அதானியின் ரூ.100 கோடி நன்கொடையை ஏற்க மாட்டோம் என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் நேற்று மாலை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதானி விவகாரம் குறித்து கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் விவாதம் நடைபெற்று வருகிறது. அதானியிடமிருந்து தெலங்கானா அரசும் நன்கொடை பெற்றது என சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
வேலையில்லாத பட்டதாரிகளுக்கு தொழில்நுட்ப அறிவை புகட்ட திறன் மேம்பாட்டு பல்கலைக்கழகம் அமைக்க தீர்மானித்தோம். இதற்கு...
சத்தீஸ்கர் மாநிலத்தில் போலீஸார் நடத்திய என்கவுன்ட்டரில் மாவோயிஸ்ட்கள் 3 பேர் உயிரிழந்தனர். ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் தேசிய பூங்காவுக்கு உட்பட்ட அடர்ந்த வனப் பகுதியில் கடந்த சனிக்கிழமை மாவோயிஸ்ட்கள் மறைத்து வைத்திருந்த வெடிபொருள் வெடித்து சிதறியது. அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிஆர்பிஎப் படை வீரர் ஒருவர் அதில் சிக்கி படுகாயம் அடைந்தார். அவர் பிஜப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...
ஜம்முவின் கீஷ்த்வார் பகுதியில் நேற்று முன்தினம், மத்தியப் பாதுகாப்புப் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்களுடன் இருந்த டைசன் என்ற மோப்ப நாய், தீவிரவாதிகளின் இருப்பிடத்தை நோக்கி குரைத்துள்ளது. இதையடுத்து, டைசனை தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். காலில் குண்டு பட்டு ரத்தம் கொட்டியபோதும் டைசன் தொடர்ந்து குரைத்துள்ளது. இதையடுத்து பாதுகாப்புப்படையினர் தொடங்கிய நடவடிக்கையில் 3 தீவிரவாதிகளும் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
தீவிரவாதிகளின் மறைவிடத்தைக் கண்டுபிடித்த ஜெர்மன் ஷெப்பர்ட் நாயான டைசன், இந்த...
ஜம்மு – காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல்: காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சிகள் வேட்பாளர் பட்டியல் வெளியீடு
admin - 0
ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலுக்கான 9 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. இதையடுத்து 32 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை தேசிய மாநாட்டுக் கட்சி நேற்று வெளியிட்டது. இதனிடையே 29 பேர் கொண்ட 3-வது பட்டியலை வெளியிட்டது பாஜக.
அக்.4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை: ஜம்மு காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் சட்டமன்ற தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. வரும் செப்டம்பர் 18, 25...









