டெல்லி அருகே காஜியாபாத் பகுதியை சேர்ந்தவர் ஹரிஷ் ராணா. சண்டீகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் பி.டெக் படித்து வந்தார்.
இவர் தங்கியிருந்த விடுதியின் 4-வது மாடியிலிருந்து கடந்த 2013, ஆகஸ்ட் 20ம் தேதி தவறி விழுந்தார். இதில் அவருக்கு நரம்பிழைத் தண்டில் காயம் ஏற்பட்டது.
சிகிச்சைக்குப் பிறகும் நினைவு திரும்பாத நிலையில், மருத்துவ ரீதியில் உணவும், நீரூட்டமும் அளித்தும் தொண்டையில் சுவாச குழாய் பொருத்தியும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. படுத்த...
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மீது பதவி நீக்கத் தீர்மானம்: திரிணமூல் காங்கிரஸுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு
admin - 0
மேற்கு வங்க மாநிலத்தில் வரும் ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு கடந்த ஆண்டு டிசம்பரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) தேர்தல் ஆணையத்தால் மேற்கு வங்கத்தில் தொடங்கப்பட்டன.
இந்நிலையில் இந்த எஸ்ஐஆர் பணியில் முறைகேடுகள் நடை பெற்றுள்ளதாகவும், இதற்குத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்தான் காரணம் என்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி புகார் கூறி வருகிறது. இதைத் தொடர்ந்து அவரை...
சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் பிராந்தியத்தில் 108 மாவோயிஸ்ட்கள் பாதுகாப்புப் படையினரிடம் நேற்று சரணடைந்தனர். இவர்களின் தலைக்கு அரசு ரூ.3.95 கோடி வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, சரணடைந்தவர்களில் 8 பேர் மாவோயிஸ்ட்களின் முக்கியக் குழு உறுப்பினர்கள் ஆவர். மார்ச் 31-ம் தேதிக்குள் இந்தியாவில் மாவோயிஸத்தை முற்றிலும் ஒழிப்பதாக மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்நிலையில், பிஜப்பூர் மாவட்டத்திலிருந்து 37 பேரும், தந்தேவாடாவில் இருந்து 30...
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது.
மக்களவையில் கடும் அமளி மற்றும் முழக்கங்களுக்கு இடையே, அவையை நடத்திக் கொண்டிருந்த ஜெகதாம்பிகா பால், சபாநாயகரை நீக்கக் கோரும் தீர்மானம் தோல்வியடைந்ததை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.
தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த ஒத்துழைக்குமாறும், உறுப்பினர்கள் தங்களது...
5 மாநில சட்டப் பேரவை தேர்தலுக்கான தேதி இன்று வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி, கேரளம் ஆகிய 5 மாநிலங்களுக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணையர்கள் சென்று தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்திவிட்டு கடந்த 10ம் தேதி திரும்பியுள்ளனர்.
வழக்கமாக ஆய்வு முடிந்த ஓரிரு நாட்களில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும். எனவே, 5 மாநில...
மேகாலயாவில், ‘கேரோ ஹில்ஸ் தன்னாட்சி மாவட்டக் கவுன்சில்’ தேர்தல் ஏப்ரல் 10-ல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த வாரம் தொடங்கியது. வேட்பு மனுவுடன் பழங்குடியினத்தவர் என்பதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. இதை கேரோ பழங்குடியின அமைப்புகள் வரவேற்றன. ஆனால், பழங்குடியினர் அல்லாத தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடுகின்றனர்.
இந்நிலையில், துரா பகுதியில் உள்ள துணை ஆணையர் அலுவலகத்தை நேற்று முன்தினம் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர்....
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் பிவாண்டியைச் சேர்ந்த 20 வயது இளைஞர், சமூக வலைதளம் மூலம் கடந்த 2024-ம் ஆண்டு மைனர் பெண் ஒருவருடன் பழகி உள்ளார். பின்னர் இருவரும் நேரில் சந்தித்து நெருக்கமாகப் பழகி உள்ளனர்.
இந்நிலையில், கடந்த மாதம் தான் அந்தப் பெண்ணுக்கு 18 வயதாகி உள்ளது. இதையடுத்து தன்னுடைய மதத்துக்கு மாறி திருமணம் செய்து கொள்ளும்படி அந்தப் பெண்ணுக்கு இளைஞர் மிரட்டல் விடுத்து வந்துள்ளார். பயந்து...
திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக மனைவி புகார்: காதல் ஒன்றும் தவறு இல்லை என்கிறார் கேரள அமைச்சர்
admin - 0
திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக மனைவி புகார் கூறியதையடுத்து தனக்கு ஒன்றல்ல, 5 ஆயிரம் காதல் உறவு இருப்பதாக கேரள மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.பி. கணேஷ்குமார் கூறியுள்ளார்.
கேரள சட்டப்பேரவைக்கு வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. கொல்லம் மாவட்டம் பதனப்புரம் தொகுதியில் இருந்து 5-வது முறையாக எம்எல்ஏவாக கணேஷ்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் நடிகரும் கூட. 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர்...
ஈரான் மீதான அமெரிக்கா - இஸ்ரேல் போரின் தாக்கத்தால் நாடு முழுவதும் எல்பிஜி எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நாட்டு மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும், நிலைமையை சீராக்க அரசு மும்முரமாக பணியாற்றி வருகிறது என்றும் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “யாரும் பீதியடைய வேண்டாம். ஓட்டல்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்க எங்கள் அரசு உறுதி பூண்டுள்ளது.
இந்த நிலைமையை...
உத்தர பிரதேசத்தில் உபெர், ஓலா போன்ற நிறுவனங்களுக்கு புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட உள்ளது. இது, முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசின் புதிய நடவடிக்கையாக அமைந்துள்ளது.
உ.பி. மாநில அமைச்சரவை கூட்டம் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் உ.பி. மோட்டார் வாகன விதிகள் 1998-ல் திருத்தம் செய்யும் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதன்படி உபெர், ஓலா போன்ற நிறுவனங்கள் மாநிலத்தில் நான்கு சக்கர வாகனங்களை இயக்குவதற்கு கட்டாய...










