போரில் மறைந்த ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து டெஹ்ரான் மீது கடந்த பிப்ரவரி 28-ம் தேதி வான்வழித் தாக்குதலை தொடங்கின. இந்த தாக்குதலின் முதல் நாளில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி (86) கொல்லப்பட்டார். இஸ்லாமிய சட்டத்தின்படி இறந்தவர்களின் உடலை கூடிய விரைவில் அடக்கம் செய்ய வேண்டும் என்றாலும்...
குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த மினேஷ் பாய், கடந்த 2017ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி ரத யாத்திரை திருவிழா நாளில் தனது மனைவி கோமல்பென் சோலங்கியை ஊர் சுற்றிக் காட்டுவதாகக் கூறி வெளியே அழைத்துச் சென்றுள்ளார்.
நள்ளிரவில் மனைவியை சபர்மதி ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இருவரும் பேசிக் கொண்டிருந்த போது, எதிர்பாராத நேரத்தில் மனைவியை தூக்கி ஆற்றில் வீசியுள்ளார். பிறகு அங்கிருந்து தப்பிய மினேஷ் மறுநாள் கலுபூர்...
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் வழக்கமாக ஜூன் 10-ம் தேதி வாக்கில் பருவமழை தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு 13 நாட்கள் தாமதமாக செவ்வாய்க்கிழமை பருவமழை தொடங்கியது. அன்று இரவு முழுவதும் கனமழை பெய்தது. நேற்று காலையிலும் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது. மும்பை மற்றும் தானே, ராய்கட், பால்கர் மற்றும் சிந்துதுர்க்...
நாட்டின் தொழில்நுட்ப தலைநகராக விளங்கும் பெங்களூருவில் 20 லட்சத்துக்கும் அதிகமான ஐடி ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் தங்களின் அலுவலகங்களுக்கு மெட்ரோ ரயில் மூலம் செல்கின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் கப்பன் பூங்கா மெட்ரோ நிலையத்தில் ஊதா வழித்தடத்தில் இயங்கிய ரயிலில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. கெம்பேகவுடா மெட்ரோ நிலையம் முதல் பையப்பனஹள்ளி வரையிலான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் விதான சவுதா, எம்.ஜி.சாலை, இந்திரா...
கேரளாவில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் கட்சியின் வி.டி.சதீஷன் முதல்வராக பதவியேற்றார்.
இந்நிலையில், கேரளாவில் புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, குறைந்த ஆல்கஹால் கொண்ட மது பானங்களுக்கான வரி 251-லிருந்து 121 சதவீதமாகக் குறைக்கப்பட உள்ளது.
இது குறித்து ‘சமஸ்தா கேரளா ஜெம்-இய்யத்துல் உலமா' அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ”போதைப் பொருள் மற்றும்...
நிஹாங் என்பவர்கள் சீக்கியர்களில் ஒரு பிரிவினர் ஆவர். இவர்கள், சீக்கிய மதத்தில் ஆயுதம் ஏந்திய போர் வீரர்களாக அழைக்கப்படுகின்றனர்.
நாடு முழுவதும் உள்ள குருத்வாராக்களுக்கு நிஹாங் சீக்கியர்கள் புனிதப் பயணம் மேற்கொள்கின்றனர். கடந்த 16ம் தேதி உத்தராகண்ட் மாநிலம், கர்ணபிரயாக் பகுதியில் 6 நிஹாங் சீக்கியர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது நிஹாங் சீக்கியர்கள் வாள்களை வீசியதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் ஒருவரின் நிலைமை...
நாடு முழுவதும் நேற்று முன்தினம் நடைபெற்ற மருத்துவப் படிப்புகளுக்கான 'நீட்-யுஜி' மறுதேர்வு எவ்வித குளறுபடி யும் இன்றி வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாக தேசியத் தேர்வு முகமையின் (என்டிஏ) தலைமை இயக்குநர் அபிஷேக் சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: "நீட் மறுதேர்வு எவ்வித குளறுபடியுமின்றி மிகச் சரியான முறையில் நடத்தப்பட்டுள்ளது. மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும், பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் தேவையான அனைத்து...
பிஹார் நீட் மறுதேர்வு மையத்தில் ‘முன்னாபாய் எம்பிபிஎஸ்’ பாணியில் மோசடி செய்ய முயன்ற 24 பேர் கைது
admin - 0
நாடு முழுவதும் நீட்-யுஜி மறுதேர்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. பிஹார் மாநிலம் லக்கிசராய் பகுதியில் நடைபெற்ற நீட் மறுதேர்வின்போது, ‘முன்னாபாய் எம்பிபிஎஸ்’ திரைப்பட பாணியில் ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட முயன்றது. இதை போலீஸார் முறியடித்துள்ளனர்.
இந்த கும்பல் விண்ணப்பதாரர்களுக்குப் பதிலாக நுழைவுத் தேர்வை எழுதுவதற்காக ‘சால்வர்களை' (மாற்று நபர்களை) ஏற்பாடு செய்ததாக காவல் துறை குற்றம் சாட்டியுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் மருத்துவ மாணவர்கள் மற்றும் தேர்வு செயல்பாட்டில்...
மே.வங்க முன்னாள் முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் நிறுவனருமான மம்தா பானர்ஜியை கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கியுள்ளதாக ரிதப்ரதா பானர்ஜி தலைமையிலான அதிருப்தி குழுவினர் அறிவித்தனர்.
கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் விடுதியில், ரிதப்ரதா பானர்ஜி தலைமையில் திரிணமூல் காங்கிரஸின் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மற்றும் நகராட்சி மாமன்ற உறுப்பினர்களின் (கவுன்சிலர்கள்) அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாலை 4 மணியளவில் நடைபெற்ற இந்தச் சிறப்பு கூட்டத்தில் கொல்கத்தா, பஹரம்பூர்,...
ஹைதராபாத் நகரில் நள்ளிரவு பதிவான கனமழை காரணமாக சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்தது. மேலும், மின்சாரம் தடை செய்யப்பட்ட காரணத்தால் மக்கள் அவதியடைந்தனர்.
இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய இந்த மழை ஹைதராபாத் நகரின் பல்வேறு பகுதிகளில் பதிவானது. கேத்திரெட்டிப்பள்ளி, சந்திராநகர், மாதப்பூர், கச்சிபௌலி, ஹைடெக் சிட்டி, மணிகொண்டா, பிலிம் நகர், ஜூபிளி ஹில்ஸ், சார்மினார், மியாபூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த கனமழை சுமார் 2 மணி...










