தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் துணைத் தலைவர் பூச்சி முருகன். திமுக தலைமை நிலையச் செயலாளராகவும் உள்ளார். சமீபத்திய தேர்தலின்போது தமிழ்நாடு முழுக்க பயணித்து தீவிரமாகக் கட்சிப் பணியாற்றியவர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணத்தில் இருப்பதால், ஓய்வு எடுப்பதற்காக முன்னாள் எம்.பியான ஆர்.எஸ்.பாரதி, மதுரை கவுன்சிலர் சுதன் உள்ளிட்ட கட்சிப் பிரமுகர்களுடன் இவர் கொடைக்கானலுக்குச் சுற்றுலா சென்றிருந்தார்.நேற்று முன் தினம் பிற்பகலில் பூச்சிமுருகனுக்கு திடீரென தலைச்சுற்றல் ஏற்பட்டு...
தமிழக முதல்வர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை ஹெச். வினோத் இயக்கியுள்ளார். இதில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் என பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில் தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளது. இதையடுத்து இப்படம் ஜூலை 24-ல் வெளியாகிறது என கனடாவைச் சேர்ந்த திரைப்பட விநியோக நிறுவனமான யார்க்...
யோகி பாபு நடித்துள்ள 300-வது திரைப்படம், ‘அர்ஜுனன் பேர் பத்து’. அனாமிகா மஹி, காளி வெங்கட், அருள்தாஸ், லெனின் பாரதி, சுப்பிரமணியம் சிவா என பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்துக்கு பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரா.ராஜ்மோகன் எழுதி இயக்கியுள்ள இந்தப் படம், வரும் 17-ல் வெளியாகிறது. தேவ் சினிமாஸ் சார்பில் கிருத்திகா தங்கப்பாண்டி மற்றும் தங்கப்பாண்டி தயாரித்துள்ள இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
விழாவில்...
போதிய கவனம் பெறாத, அதேநேரம் அதைப் பற்றி சற்றும் கவலைப்படாமல், தான் தேர்ந்தெடுத்த துறையில் உழைத்துக் கொண்டிருந்தவர்களில் ஒருவர் ஒளிப்பதிவாளர் - இயக்குநர் செழியன்.
திரைபடக் கலை, ஒளிப்படக் கலை, இசை, எழுத்து எனப் பன்முகத் திறமை வாய்ந்தவர். கடந்த மே மாதம் ஒரு திரையிடலுக்குச் சென்றிருந்தபோது, நெடு நாள் கழித்து அவரை சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்தது. 2 மாதங்கள் கூடக் கடந்திராத நிலையில் நேற்று அவர் காலமாகிவிட்டதாக...
தமிழ் சினிமாவில் ஒருதலைக் காதல் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது முரளி நடிப்பில் வெளியான ‘இதயம்’ திரைப்படம்தான். சொல்லாத காதலின் வலியை பேசிய அந்த திரைப்படம் அப்போதைய இளைஞர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட அதே போன்றதொரு கதைக்களத்தில் முரளியின் மகன் அதர்வா நடித்துள்ள படம்தான் ‘இதயம் முரளி’.
திருச்சியில் தன் மாமாவுடன் (நட்டி) வளரும் இதயாவின் (அதர்வா) வாழ்க்கையில் வெவ்வேறு காலகட்டங்களில் மலரும் காதல்கள் அதை சொல்ல...
யூடியூப்பில் பிரபலமாகி, படம் இயக்க வருபவர்களின் எண்ணிக்கை இப்போது அதிகரித்து வருகிறது. அந்த லிஸ்ட்டில் புதிதாக இணைந்திருக்கிறார் நிரஞ்ஜன். ‘மிஸ்டர் பாரத்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் அவருக்கு இயல்பாகவே வருகிறது காமெடி. இதில், சம்யுக்தா விஸ்வநாதன், பால சரவணன், நிதி பிரதீப், ஆர்.சுந்தர் ராஜன், லிங்கா என பலர் நடித்துள்ளனர். பேஷன் ஸ்டூடியோஸ், ஜி ஸ்குவாட், தி ரூட் நிறுவனங்கள் சார்பாக சுதன் சுந்தரம், லோகேஷ் கனகராஜ்,...
பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன், சென்னையில் இன்று காலை உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
சிவகங்கையை சேர்ந்த அவருக்கு இளம் வயதில் போட்டோகிராஃபி மீது ஆர்வம் வந்துள்ளது. அதன் பின்னர் சினிமா துறையின் தவிர்க்க முடியாத ஒளிப்பதிவாளராக தன்னை தகவமைத்துக் கொண்டார்.
பி.சி.ஸ்ரீராமின் உதவியாளராக தனது பயணத்தை தொடங்கினார். கடந்த 2007-ல் வெளியான ‘கல்லூரி’ படம் மூலமாக ஒளிப்பதிவாளராக அறிமுகமானார்.
தொடர்ந்து ரெட்டைச்சுழி, மகிழ்ச்சி, தென்மேற்கு பருவக்காற்று, பரதேசி, ஜோக்கர் உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக...
திரையில் காணும் ஒவ்வொரு ஃபிரேமுக்கும் பின்னால் இயக்குநரின் கற்பனை, ஒளிப்பதிவாளரின் பார்வை, கலை இயக்குநரின் வடிவமைப்பு ஒன்றிணைந்து செயல்படுகின்றன.
ஒரு கதையை வார்த்தைகளால் மட்டுமல்லாமல், ஒளி, நிறம், அமைப்பு, பின்னணி மற்றும் இடவெளி ஆகியவற்றின் மூலம் பார்வையாளரின் மனதில் பதிய வைப்பதே இவர்களது பணி.
திரைக்குப் பின்: ஒளிப்பதிவாளர், கலை இயக்குநரின் கூட்டுப்படைப்பு
ஒளிப்பதிவாளர் கேமரா, லென்ஸ், ஒளியமைப்பு மற்றும் காட்சியின் உணர்வுத் தன்மையை நிர்ணயிக்கிறார். கலை இயக்குநர் கேமராவின் முன்னால் இருக்கும்...
இந்தியாவில் இருந்து ஃபார்முலா கார் பந்தயங்களின் முகமாக அறியப்பட்டவர் கோயமுத்தூரில் பிறந்து வளர்ந்த நரேன் கார்த்திகேயன். இன்று அவரே வியக்கும் அளவுக்கு ஃபார்முலா கார் பந்தயங்களில் ஆர்வம் காட்டும் ஒருவர் உண்டென்றால் அவர்தான், தன்னுடைய ரசிகர்களால் ‘தல’ என்று அன்பாகவும் பல நேரங்களில் வெறித்தனமாகவும் அழைக்கப்படும் அஜித்.
இன்று விஜய் தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்களின் ஆதரவைப் பெற்று முதல்வராகிவிட்டார். அதனால் அவர் இனி நடிக்கப் போவதில்லை என்று முன்னதாகவே...
இந்தியாவின் பாரம்பரிய திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஏவிஎம் 80 ஆண்டுகளில், 6 மொழிகளில் 179 படங்களைத் தயாரித்துள்ள இந்நிறுவனத்தில் 6 முதல்வர்கள் பணியாற்றி இருக்கிறார்கள்.
இந்நிலையில் புகழ்பெற்ற இந்நிறுவனத்தின் ஒரு படப்பிடிப்பு தளம், ‘ஏவிஎம் கன்வென்ஷன் சென்டர்’ ஆக மாற்றப்பட்டுள்ளது. இதன் அறிமுக விழாவில், ஏவிஎம் பாலசுப்பிரமணியன், ஏவிஎம் சரவணனின் மகன் குகன், அருணா குகன், இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், வி.சி.குகநாதன், நடிகர் மோகன் ராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்களிடம்...










