Google search engine
காதலை மையப்​படுத்தி உரு​வாகி வரும் ‘லவ் புராஜெக்ட்’ படத்தை டி.ஐ.கபில் ஹீரோ​வாக நடித்து இயக்​கு​கிறார். இவர் பிரதீப் ரங்கநாதனுடன் குறும்​ படத்​தில் பணி​யாற்​றிய​வர். சங்​கீ​தா, சக்​திவேல், குண்டு சத்​யா, வினோத் விஜய் சேனா​திபதி ஆகியோர் நடித்​துள்​ளனர். சாதிக் கபீர் ஒளிப்​ப​திவு செய்​துள்ள இப்படத்​துக்கு சிமியோன் டெல்​பர் இசை அமைத்​துள்​ளார். படம் பற்றி இயக்​குநர் கபில் கூறும்​போது, “இன்​றைய இளைஞர்களின் காதல் மற்​றும் உணர்​வு​களை மைய​மாகக் கொண்டு உரு​வாகும் படம் இது. காதலை...
‘மன்னர் வகையறா’ படத்திற்காக வாங்கிய ரூ.4.5 கோடி கடன் வழக்கில் நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து சென்னை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதையடுத்து, மேல்முறையீட்டைக் கருத்தில் கொண்டு தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நடிகர் விமல் நடித்த திரைப்படம் ‘மன்னர் வகையறா’. இந்தப் படத்தை தயாரிக்க நடிகர் விமல், பைனாஸ்சியர் கோபி என்பவரிடமிருந்து ரூ.4.5 கோடி கடனாக பெற்றுள்ளார். படம் வெளியான பின்னரும் அந்தத் தொகையை அவர் வழங்கவில்லை. பின்னர்,...
கடந்த பொங்கலுக்கு ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு, சென்சார் பிரச்சினை, இணையத்தில் முழுப் படமும் லீக், ஏ சான்றிதழ் என பல சிக்கல்களைக் கடந்து ஒருவழியாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது தமிழக முதல்வர் விஜய்யின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’. ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத என்டர்டெயினராக இருந்துவந்த விஜய் தனது கடைசித் திரைப்படமாக அறிவித்துவிட்ட இந்தப் படம் அவரது பிரியாவிடைக்கு நியாயம் செய்ததா என்று பார்க்கலாம். மதுரை சிறையில்...
மாணவர்கள் போராடுவதற்கான ஒரு இடத்தை அரசே நிர்ணயித்துக் கொடுக்க வேண்டும் என்று இயக்குநர் பா.ரஞ்சித் கோரிக்கை வைத்துள்ளார். டெல்லியில் மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்யக்கோரியும், சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நீலம் பண்பாட்டு மையத்தின் ஒருங்கிணைப்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர், பா.ரஞ்சித், நடிகை ஆண்ட்ரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். இதில் இயக்குநர் பா.ரஞ்சித் பேசியதாவது: “தமிழகத்தில் போராட்டத்தில்...
யோகிபாபு நடிப்பில் உருவாகி வரும் ‘காகங்கள்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ‘காக்கா முட்டை’ மற்றும் ‘குற்றமே தண்டனை’ போன்ற தேசிய விருது பெற்ற திரைப்படங்களின் எழுத்தாளரான ஆனந்த் அண்ணாமலை, இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு மற்றும் படத்தொகுப்பு ஆகிய அனைத்துப் பொறுப்புகளையும் ஏற்று இயக்கியுள்ளார். இப்படத்தில் கிஷோர், யோகி பாபு, விதார்த், லிஜோமோல் ஜோஸ், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மனித...
‘தினந்​தோறும்’ நாக​ராஜ் இயக்​கும் படத்​துக்கு ‘ஆகா​யம்’ என்று தலைப்பு வைத்​துள்​ளனர். இதில் ‘கன்னி மாடம்’ ஸ்ரீராம் கார்த்​திக் நாயக​னாக நடித்​துள்​ளார். கதா​நாயகி​யாக ஆலிஷா மிராணி அறி​முக​மாகிறார். மேலும் ஷீலா, கனி​கா, சந்​தான பார​தி, ஜெயப்​பிர​காஷ், கிரி துவாரகிஷ் என பலர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்​ளனர். டெல்டா டாக்​கீஸ் சார்​பில் ஜெயச்​சந்​திரன் மற்​றும் கார்த்​திகா தேவி இணைந்து தயாரித்​துள்ள இப்​படத்​துக்கு கார்த்​திக் நல்​ல​முத்​து ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். ரகு நந்​தன் இசை அமைத்​துள்​ளார். இந்​தப்...
அர்​ஜுன் தாஸ், அன்னா பென் முதன்மை பாத்​திரங்​களில் நடித்த படம் ‘கான் சிட்​டி’. இதில் யோகி​பாபு, வடிவுக்​கரசி, குழந்தை நட்சத்​திரம் அகிலன் உள்பட பலர் நடித்​துள்​ளனர். பவர் ஹவுஸ் பிக்​சர்ஸ் தயாரித்​துள்ள இப்​படத்தை அறி​முக இயக்குநர் ஹரிஷ் துரை​ராஜ் இயக்​கியுள்ளார். ஷான் ரோல்​டன் இசை அமைத்​துள்​ளார். இப்​படம் வெளி​யாகி வரவேற்​பைப் பெற்று வரும் நிலை​யில் படக்​குழு​வின் நன்றி அறி​விப்பு விழா சென்​னை​யில் நடை​பெற்​றது. படத்​தில் பணி​யாற்​றிய​வர்​கள் பங்கேற்​றனர். நடிகை வடிவுக்​கரசி பேசும்​போது,...
ராகவன் மற்​றும் விஜய​பாஸ்​கர் முதன்​மைக் கதா​ பாத்​திரங்​களில் நடித்​துள்ள படம், ‘தட்​டு​வண்​டி’. இதில் திலீபன், மேரி பென்சி குளோரி​யா, தங்​க துரை என பலர் நடித்​துள்​ளனர். இப்​படத்​தை, ‘பில்​டர் கோல்​டு’ திரைப்​படத்தை இயக்​கிய விஜய​பாஸ்​கர் இயக்​கி​யுள்​ளார். சர்​வைவல் பிக்​சர்ஸ் தயாரிக்​கும் இப்​படத்​துக்கு இளை​ய​ராஜா இசையமைக்​கிறார். இதன் படப்​பிடிப்பு சமீபத்​தில் நிறைவுபெற்றது. தற்​போது பாடல் பதிவு, பின்​னணி இசைப் பணிகள் நடை​பெற்று வரு​கின்​றன.
திரைப்​படத்​தில் ஒரு கதா​பாத்​திரம் திரை​யில் தோன்​றும் தருணத்​தில் பார்​வை​யாளர்​கள் முதலில் கவனிப்​பது அவரது தோற்​றத்​தைத்​தான். அந்த தோற்​றத்தை உரு​வாக்​கு​வ​தில் ஆடை வடிவ​மைப்​பாளர், சிகை அலங்​காரக் கலைஞர், ஒப்​பனை​யாளர், கலை இயக்​குநர் மற்​றும் ஒளிப்​ப​தி​வாளர் ஆகியோர் ஒன்​றிணைந்து செயல்​படு​கின்​றனர். சிறந்த ஆடையலங்​காரம் என்​பது வெறும் உடை மட்​டுமே அல்ல; அது கதா​பாத்​திரத்​தின் வாழ்க்கை வரலாறு, சமூக நிலை, மனநிலை மற்​றும் கதை​யின் பயணத்தை வெளிப்​படுத்​தும் அமை​தி​யான காட்​சி மொழி​யாகும். ஆடை வடிவ​மைப்​பின் தொடக்​கம் ஓர்...
 “இந்தியா பொய்களை உற்பத்தி செய்வதில் முதலிடத்தில் இருக்கிறது. சாதி, மதங்களை வைத்து பொய்கள் பரப்பப்படுகின்றன. ஒரு பொய், மனிதனை முட்டாளாக்கிவிடும். இதை தடுக்கச் சட்டங்கள் தேவை. ‘ஜனநாயகன்’ வெறுப்புக்கு எதிரான படம். தனி நபர்களை குறிவைத்து ‘ஜனநாயகன்’ எடுக்கப்படவில்லை” என அப்படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘ஜனநாயகன்’ படத்துக்கு நிறைய தடைகள், பிரச்சினைகள் இருக்கின்றன. இதைத் தாண்டி மக்கள் இப்படத்துக்கு ஆதரவு தர...