தொடர்ச்சியான தோல்விகளுக்கு முற்றுப்​புள்ளி வைக்​குமா பஞ்சாப்? – ​இன்று மும்பை இந்​தி​யன்ஸ் உடன் மோதல்

0
30

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு தரம்சாலா​வில் நடை​பெறும் ஆட்​டத்​தில் பஞ்சாப் கிங்ஸ் – மும்பை இந்​தி​யன்ஸ் அணி​கள் மோதுகின்​றன. ஸ்ரேயஸ் ஐயர் தலை​மையி​லான பஞ்​சாப் கிங்ஸ் அணி முதல் 7 ஆட்​டங்​களில் தோல்வியை சந்​திக்​காமல் வலம் வந்​தது. ஆனால் கடைசி​யாக விளை​யாடிய 4 ஆட்​டங்​களி​லும் அந்த அணி தோல்​வியை சந்தித்துள்​ளது.

13 புள்​ளி​களு​டன் பட்​டியலில் 4-வது இடத்​தில் உள்ள பஞ்​சாப் அணி பிளே ஆஃப் சுற்​றுக்கு முன்​னேற வேண்​டு​மா​னால் இன்​றைய ஆட்டம் உட்பட எஞ்​சி​யுள்ள 3 ஆட்​டங்​களில் 2-ல் வெற்றி பெற வேண்​டும் என்ற நெருக்​கடிக்கு தள்​ளப்​பட்​டுள்​ளது. தொடரின் முதல் பாதி​யில், மிகச்​சிறந்த ஃபார்​மில் இருந்த பேட்​டிங் வரிசை, பந்​து​வீச்சு துறையில் இருந்த பலவீனங்​களை மறைத்​தது. ஆனால் சமீப​கால​மாக சவாலான இலக்கை நிர்​ண​யித்த பிறகும் கூட மோச​மான பந்​து​வீச்சு காரண​மாக வெற்​றியை வசப்​படுத்த முடியாத சூழ்​நிலை பஞ்​சாப் அணிக்கு உரு​வாகி உள்​ளது.

கடைசி​யாக டெல்லி அணிக்கு எதி​ராக தரம்​சாலா ஆடு​களத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் பஞ்​சாப் அணி 210 ரன்​கள் குவித்​தும் தோல்​வியை சந்​தித்து இருந்​தது. வேகப்​பந்து வீச்​சுக்கு சாதகமாக இருந்த அந்த ஆடு​களத்​தில் கடைசி ஐந்து ஓவர்​களில் பஞ்​சாப் அணி​யின் வேகப்​பந்து வீச்​சாளர்​களால் பந்​துகளைச் சரி​யான நீளத்​தில் வீச முடிய​வில்​லை. அர்​ஷ்தீப் சிங்கை உள்​ளடக்​கிய அந்த அணி​யின் வேகப்​பந்து வீச்சு துறை இந்​தத் தொடரில் உள்ள 10 அணி​களில் அதி​க​மான ரன்​களை தாரை​வார்த்​துள்​ளது.

ஐபிஎல் தொடரின் முதல் பாதி​யில் சேவியர் பார்ட்​லெட், அர்​ஷ்தீப் சிங் கூட்​டணி புதிய பந்​தில் நிலை​யான செயல் திறனை வழங்கியது. ஆனால் தற்​போது லாக்கி பெர்​குசன் வரு​கை​யால் அந்​தச் சமநிலை குலைந்​துள்​ளது; பெர்​குசன் பொது​வாக மிடில் மற்​றும் இறு​திக்​கட்ட ஓவர்​களி​லேயே சிறப்​பாக செயல்படக்கூடியவர். கடந்த போட்​டி​யில் பென் டுவார்​ஷூ​யிஸை சேர்த்​ததன் மூலம் 3 இடதுகை வேகப்​பந்து வீச்​சாளர்​களு​டன் களம் இறங்​கி​னார்​கள். ஆனால் இவர்​கள் அதிக ரன்​களை தாரை வார்த்​தனர்.

இதில் முன்​னணி வேகப்​பந்து வீச்​சாள​ரான அர்​ஷ்தீப் சிங் நடப்பு சீசனில் விளை​யாடிய 11 போட்​டிகளில் பெரும்​பாலானவற்​றில் ஓவருக்கு சராசரி​யாக 10 ரன்​களுக்கு மேல் விட்​டுக்​கொடுத்துள்ளார். டெல்லி அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் பஞ்​சாப் அணி சுழற்​பந்து வீச்சை பயன்​படுத்​த​வில்​லை. இது​வும் அந்த அணி​யின் தோல்விக்கு காரண​மாக இருந்​த​தாக விமர்​சனங்​கள் எழுந்​தன. இதனால் இன்​றைய ஆட்​டத்​தில் யுவேந்தி சாஹல் களமிறக்​கப்​படக்​கூடும். பேட்​டிங்​கைப் பொறுத்​தவரை டாப் ஆர்டரில் பிரியன்ஷ் ஆர்யா அதிரடி தொடக்​கம் கொடுத்து வருகிறார்.

அதேவேளை​யில் கடந்த சில ஆட்​டங்​களாக பிரப்​சிம்​ரன் சிங்கிடம் இருந்து பெரிய அளவிலான தாக்​கத்தை ஏற்​படுத்​தக்​கூடிய செயல்திறன் வெளிப்​பட​வில்​லை. இதனால் அவர், மீண்​டும் மட்டையை சுழற்​று​வ​தில் கூடு​தல் கவனம் செலுத்​தக்​கூடும். கடந்த ஆட்​டத்​தில் 36 பந்​துகளில் 59 ரன்​கள் விளாசிய ஸ்ரேயஸ் ஐயரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த செயல் திறன் வெளிப்​படக்​கூடும். ஃபீல்​டிங்​கிலும் பஞ்​சாப் அணி மிகப்​பெரிய முன்​னேற்​றம் காணவேண்​டியது அவசி​ய​மாகும்.

5 முறை சாம்​பிய​னான மும்பை இந்​தி​யன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்​றுக்கு முன்​னேறும் வாய்ப்பை இழந்​து​விட்​டது. அந்த அணி 11 ஆட்​டங்​களில் 3 வெற்​றி, 8 தோல்வி​களு​டன் 6 புள்​ளி​கள் பெற்று 9-வது இடத்​தில் உள்​ளது. எஞ்​சி​யுள்ள ஆட்​டங்​களில் ஆறு​தல் வெற்றிகளை பெறு​வ​தில்​ அந்​த அணி கவனம் செலுத்தக்கூடும். இதற்​கிடையே இன்​றைய ஆட்​டம் மழை காரண​மாக பாதிக்கப்பட வாய்ப்பு உள்​ள​தாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. ஏனெனில் நேற்று மழை காரண​மாக இரு அணி​களின் பயிற்​சி​யும் பாதிக்​கப்​பட்டு இருந்​தது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here