வியட்நாம் அதிபர் தோலாம், நேற்று 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று பிஹார் மாநிலம் கயாவுக்கு அவர் வருகை தந்தார். இதையொட்டி கயா விமான நிலையத்துக்குச் சென்ற முதல்வர் சாம்ராட் சவுத்ரி, அதிபர் தோ லாமுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தார்.
இது குறித்து தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் முதல்வர் சாம்ராட் கூறும்போது, “வியட்நாம் அதிபரின் வரலாற்றுச் சிறப்புமிக்க வருகை, ஏற்கெனவே வலுவாகவும், பிணைப்பாகவும் உள்ள இந்தியா-வியட்நாம் உறவுகளை சந்தேகமின்றி புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்லும்” என்றார்.















