போகி பண்டிகை உற்சாக கொண்டாட்டம்

0
48

சென்னை மற்றும் புறநகர் பகுதி​ளில் போகி பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்​டாடப்பட்​டது. பழைய பொருட்கள் எரிக்​கப்​பட்​ட​தால், சென்னை மற்றும் புறநகர் பகுதி​களில் புகைமண்டலமாக காட்சி அளித்​தது. தை முதல் நாளில், தமிழர்களின் முக்​கியப் பண்டிகையான பொங்கல் இன்று (ஜன.14) கொண்டா​டப்​படு​கிறது.

இதையொட்டி, பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்​படை​யில் மார்​கழி​யின் கடைசி நாளான நேற்று போகி பண்டிகை கொண்​டாடப்​பட்​டது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை​யில் வீட்​டில் இருந்த தேவையற்ற பழைய பொருட்களை எரித்​தும், சிறு​வர்கள் மேளம் அடித்​தும் போகியை உற்சாக​மாகக் கொண்​டாடினர்.

நேற்று காலை பனிப்​பொழிவு இருந்த போதி​லும் சிறு​வர்கள் ஒவ்வொரு தெரு​விலும் குப்​பைகளை எரித்​தனர். இதனால்​,சென்னை​யில் பல்வேறு பகுதி​களில் புகை மண்டல​மாகக் காட்​சி​யளித்​தது. சென்னை​யில் பல்வேறு பகுதி​களில் அதிகாலையில் மழை பெய்​த​து. இதனால், போகி கழிவுகள், குப்பைகளை எரித்​ததன் விளைவாக எழுந்த புகை பெரும் பாதிப்பை ஏற்​படுத்​தவில்​லை. காற்​றின்​ மாசு குறைவாக பதிவானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here