நோயாளி விவரமறிந்து சிகிச்சை அளிக்​கும் ‘ஆயுஷ்​மான் பாரத்’ அட்டை: ​மக்​களிடம் விழிப்​புணர்வை ஏற்​படுத்த வலி​யுறுத்​தல்

0
54

நோயாளி​களின் உடல்​நிலை குறித்த விவரமறிந்​து, சிகிச்சை அளிக்க உதவும் ஆயுஷ்​மான் பாரத் சுகா​தார கணக்கு அடை​யாள அட்​டையை (ஆபா) ஆதார் மூலம் பதிவு செய்​து, பதி​விறக்​கம் செய்​ய​லாம். இதுகுறித்து பொது​மக்​களிடம் மாநில சுகா​தா​ரத் துறை அதி​காரி​கள் விழிப்​புணர்வை ஏற்​படுத்த வேண்​டுமென்று வலி​யுறுத்​தப்​பட்​டுள்​ளது.

தமிழக அரசின் முதல்​வர் விரி​வான மருத்​து​வக் காப்​பீட்​டுத் திட்​டம், மத்​திய அரசின் பிர​தான் மந்​திரி ஜன் ஆரோக்யா யோஜனா திட்​டங்​கள் ஒருங்​கிணைக்​கப்​பட்​டு, ஒரு குடும்​பத்​துக்கு ரூ.5 லட்​சம் வரை காப்​பீடு வழங்​கப்​படு​கிறது. உயிர் காக்​கும் சிகிச்​சைகளுக்கு ரூ.22 லட்​சம் வரை இழப்​பீடு பெற​வும் அனு​ம​திப்​ப​தால் முதல்​வர் காப்​பீட்​டுத் திட்​டம் கிராம மக்​களிடம் அதிக வரவேற்பை பெற்​றுள்​ளது.

இந்த திட்​டத்​தில் 2,053 சிகிச்சை முறை​கள் அங்​கீகரிக்​கப்​பட்​டுள்​ளன. இதில் 8 சிறப்பு உயர் சிகிச்​சை, 52 முழு பரிசோதனை, 11 தொடர் சிகிச்​சைகளும் அடங்​கும். மேலும், 942 தனி​யார், 1,215 அரசு மருத்​து​வ​மனை​கள் என 2,157 மருத்​து​வ​மனை​களில் சிகிச்சை பெறலாம். ஆண்டு வரு​மானம் ரூ.1.20 லட்​சத்​துக்​குள் இருக்க வேண்​டும்.

முதல்​வர் விரி​வான மருத்​து​வக் காப்​பீட்​டுத் திட்ட அட்​டையை மருத்​து​வக் காப்​பீட்​டுத் திட்ட மையங்​களில் பதிவு செய்​தும், பிரதமர் மக்​கள் ஆரோக்​கிய திட்ட அட்​டையை பொதுசேவை மையங்​களி​லும் பதிவு செய்து பெறலாம். முதல்​வர் காப்​பீட்​டுத் திட்​டத்​துக்கு வரு​மானச் சான்​று, ரேஷன் கார்​டு, குடும்ப உறுப்​பினர்​களின் ஆதார் கார்​டு​கள், புகைப்​படம் அவசி​யம்.

பிரதமர் ஆரோக்​கிய திட்​டத்​துக்கு ரேஷன் கார்​டு, குடும்ப உறுப்​பினர்​களின் ஆதார் கார்​டு​கள், பான் கார்​டு, வங்​கிக் கணக்கு விவரம், புகைப்​படம் அவசி​யம். ஆனால், பிரதமர் ஆரோக்​கிய திட்ட அட்டை 2011 மக்​கள் தொகை அடிப்​படை​யில் வழங்​கப்​பட்​ட​தாக​வும், தற்​போது வழங்​கு​வது நிறுத்​தப்​பட்​டுள்​ள​தாக​வும் முதல்​வர் காப்​பீட்​டுத் திட்ட அதி​காரி​கள் தெரிவிக்​கின்​றனர்.

பிரதமர் அடை​யாள அட்டை பெற்​றிருந்​தால், வெளி​மாநிலங்​களுக்​குச் செல்​லும்​போது அம்​மாநில அரசு மற்​றும் தனி​யார் மருத்​து​வ​மனை​களில் சிகிச்சை பெறலாம். தமிழகத்​தில் தங்​கி​யுள்ள வெளி​மாநிலத்​தவருக்கு முதல்​வர் காப்​பீட்​டுத் திட்ட அட்டை மூலம் சிகிச்சை வழங்க முடி​யாது என்​ப​தால், அவர்​களுக்கு பிரதமர் ஆரோக்​கிய திட்ட அட்டை மூலமே சிகிச்​சைகள் வழங்​கப்​படு​கின்​றன.

நோயாளி​கள் பல்​வேறு சிகிச்​சைகளுக்​காக மருத்​து​வ​மனை​களுக்​குச் செல்​லும்​போதும் ஒவ்​வொரு முறை​யும் தங்​களது உடல்​நிலை, ஏற்​கெனவே பெற்ற சிகிச்சை விவரங்​களைத் தெரிவிக்க வேண்​டி​யுள்​ளது. பெரும்​பாலானோர் அந்த நேரத்​தில் ஏற்​பட்ட பாதிப்​புக்கு மட்​டுமே சிகிச்சை பெறு​வ​தால், தேவை​யில்​லாத பக்​க​விளைவு​கள் ஏற்​படு​கின்​றன.

இதை தவிர்க்க மத்​திய அரசு ஆயுஷ்​மான் பாரத் சுகா​தார கணக்கு திட்​டத்தை செயல்​படுத்​தி​யுள்​ளது. இந்த திட்​டத்​தில் இணைய விரும்​புவோர் www.abha.abdm.gov.in என்ற வலை​தளத்​தில் பதிவுசெய்​து, 14 எண் கொண்ட அடை​யாள அட்​டையை (ஆபா) பதி​விறக்​கம் செய்ய வேண்​டும். அரசு மருத்​து​வ​மனை​கள், ஆரம்ப சுகா​தார நிலை​யங்​களி​லும் பதிவு செய்து கொடுக்​கின்​றனர். தங்​களது செல்​போன் மூல​மாக​வும் பதிவு செய்​து​கொள்ள முடி​யும்.

வருங்​காலங்​களில் சிகிச்​சைக்கு செல்​லும்​போது இந்த அட்​டையை கொண்​டு​சென்​றால் போதும். அதில் நோய், பரிசோதனை, சிகிச்சை உள்​ளிட்ட விவரங்​கள் பதிவேற்​றம் செய்​யப்​படும். இதன் மூலம் எந்த ஊரில் வேண்​டு​மா​னாலும் சிகிச்சை பெற முடி​யும். ஏற்​கெனவே சிகிச்சை பெற்ற ஆவணங்​களை எடுத்​துச் செல்​லத் தேவை​யில்​லை.

மேலும் ‘ஆபா’ அட்​டை​யுடன் மருத்​து​வக் காப்​பீட்​டுத் திட்ட அட்​டைகளும் இணைக்​கப்​படும். இதனால் காப்​பீடு அடிப்​படை​யில், நாட்​டில் உள்ள அங்​கீகரிக்​கப்​பட்ட எந்த மருத்​து​வ​மனை​யிலும் இலவச​மாக சிகிச்சை பெற முடி​யும்.

அதே​நேரத்​தில், இந்த திட்​டத்தை செயல்​படுத்த வேண்​டிய தமிழக சுகா​தா​ரத் துறை அதி​காரி​கள், அதற்​கான விழிப்​புணர்வை மக்​களிடம் ஏற்​படுத்​தாத​தால், இப்​படியொரு திட்​டம் இருப்​பதே பலருக்​குத் தெரிய​வில்​லை. எனவே, தமிழக அரசு, முதல்​வர் காப்​பீட்​டுத் திட்​டத்தை செயல்​படுத்​து​வதைப்​போல, நோயாளி​கள் நலனுக்கு முக்​கி​யத்​து​வம் வாய்ந்த மத்​திய அரசின் ஆயுஷ்​மான் பாரத் சுகா​தா​ரக் கணக்கு திட்​டத்​தை​யும் செயல்​படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று பல்​வேறு தரப்​பினரும் வலி​யுறுத்​தி​யுள்​ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here