பிவி சிந்துவுக்கு வழங்கப்பட்ட இடத்தில் கல்லூரி கட்ட வேண்டும்: ஆந்திர மக்கள் கோரிக்கை

0
258

பேட்மிண்டன் வீராங்கனையான பிவி சிந்துவுக்கு கடந்த ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில், அகாடமி கட்ட வழங்கப்பட்ட இடத்தில் மக்களுக்கு பயன்படும் வகையில் கல்லூரி கட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிவி சிந்துவின் கோரிக்கையின்படி, கடந்த ஜெகன் அரசு, அவருக்கு அகாடமி மற்றும் ஸ்போர்ட்ஸ் பள்ளி கட்ட 5 ஏக்கர் நிலத்தை விசாகப்பட்டினத்தில் உள்ள தோட்டகுரு எனும் இடத்தில் வழங்கியது. ஆனால் இதுவரை அங்கு எதுவும் கட்டப்படவில்லை என்பதால், அப்பகுதி மக்கள், அரசு வழங்கிய அந்த இடத்தில் ஜூனியர் கல்லூரி கட்ட வேண்டும் என போர்க்கொடி தூக்கி உள்ளனர். இது தொடர்பாக அப்பகுதி மக்கள் விசாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனுவும் கொடுத்துள்ளனர். மேலும் அப்பகுதி மக்கள் பிவி சிந்துவுக்கு எதிராக அவருக்கு வழங்கப்பட்ட இடத்தின் முன் மறியல் போராட்டமும் செய்துள்ளனர். ஆகையால், இந்த இடத்தில் கல்லூரி கட்டப்படுமா அல்லது பிவி சிந்துவுக்கே அந்த இடம் ஒதுக் கப்படுமா என்பது விரைவில் தெரியவரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here