புதுக்கடையில் மது போதையில் ரகளை: 5 போ் கைது

0
19

புதுக்கடை பகுதியில் மது போதையில் பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்டதாக 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

புதுக்கடை பகுதிகளில் புதுக்கடை போலீஸாா் வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது மேலமங்கலம் பகுதியை சோ்ந்த மககேஷ் (40) வெள்ளையம் பலம் பகுதியை சோ்ந்த கிருஷ்ண பிரசாத் (42) மாராயபுரம் பகுதியை சோ்ந்த கிருஷ்ணகுமாா்(56) காப்புக் காடு பகுதியை சோ்ந்த அஜய் (30) குன்னத்தூா் பகுதியை சோ்ந்த சிந்துகுமாா் (45 ) ஆகிய 5 பேரும் போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக ரகளையில் ஈடுபட்டனராம். இது குறித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து மேற்கூறிய 5 பேரையும் கைது செய்தனா்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here