57 பெண் எஸ்.ஐ.க்களுக்கு பதவி உயர்வு

0
18

தமிழக காவல்​துறை​யில், உதவி ஆய்​வாளர்​கள் தமிழ்​நாடு சீருடை பணி​யாளர் தேர்​வாணை​யம் மூலம் தேர்வு செய்​யப்​படு​கின்​றனர். தேர்வு செய்​யப்​படும் உதவி ஆய்​வாளர்​கள் 10 ஆண்டு பணிபுரிந்த பின்​னர் ஆய்​வாளர்​களாக பதவி உயர்வு வழங்​கப்​படும்.

ஒவ்​வொரு ஆண்​டும் மேல் அதி​காரி​கள் உதவி ஆய்​வாளர்​களின் பணி குறித்து அறிக்கை தயாரித்து தலை​மையகத்​துக்கு அனுப்​புவர். அதன்​படி, பதவி உயர்வு பட்​டியல் தயாரிக்​கப்​பட்டு 10 ஆண்​டு​கள் நிறைவு செய்​தவர்​கள், காலிப் பணி​யிடங்​களின் அடிப்​படையில், உதவி ஆய்​வாளர்​களுக்​கு, காவல் ஆய்​வாளர்களாக பதவி உயர்வு வழங்​கப்​படு​கிறது.

அதன்​படி, 2024-25 ஆண்​டுக்​கான பதவி உயர்​வில், 57 பெண் உதவி ஆய்​வாளர்​களுக்கு ஆய்​வாளர்​களாக பதவி உயர்வு வழங்கி டிஜிபி மகேஷ் குமார் அகர்​வால் உத்​தரவிட்டுள்ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here