நாகர்கோவில் மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில், நகரில் பாதாள சாக்கடை பணிகள் முழுமையாக நிறைவடையாதது மற்றும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக பாஜக மாமன்ற உறுப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பாக மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையரை முற்றுகையிட்டு அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், கூட்டத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.















