தக்கலை: கோயிலில் நகை பணம் திருடியவர் கைது

0
52

பரைக்கோடு பத்ரேஸ்வரி அம்மன் கோவிலில் சம்பவ தினம் இரவு மர்ம நபர் புகுந்து சாமி சிலையில் இருந்து சுமார் ஒரு கிராம் தங்க நகை மற்றும் உண்டியல் பணத்தை திருடி சென்றார். இது குறித்து கோவில் துணைத்தலைவர் நெல்லியப்பன் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், குளச்சல் பகுதியை சேர்ந்த விஜய் (28) என்பவர் நகைகளை திருடியது தெரியவந்தது. போலீசார் நேற்று விஜய்யை கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே திருட்டு வழக்குகள் உள்ளன.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here