திருவட்டாறு பகுதி கல்லறவிளையில் உள்ள ஒரு கிறிஸ்தவ கோயிலில், மாதா சுரூபத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த கண்ணாடி உடைக்கப்பட்டு, சுரூபத்தின் கீழ் இருந்த இரும்பு உண்டியல் திருடப்பட்டுள்ளது. நேற்று காலை பொதுமக்கள் இதை கண்டறிந்துள்ளனர். இது குறித்து ஆலய பங்கு பேரவை துணைத் தலைவர் ஜெரின் திருவட்டாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து, ஆலயத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.















