நாகக்கோடு பகுதியைச் சேர்ந்த பிரின்ஸ் என்பவரின் 4 வயது மகன் திஷான், சர்ச் திருவிழாவில் கலை நிகழ்ச்சியில் பங்கேற்க நடன ஒத்திகை முடிந்து வீடு திரும்பும் போது, எதிரே வந்த டெம்போ மோதி பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து குலசேகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.















