கார்த்தி படத்தில் நாயகி ஆகிறார் மீனாட்சி சவுத்ரி

0
24

கார்த்தி நடிக்கவுள்ள புதிய படத்தின் நாயகியாக மீனாட்சி சவுத்ரி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

கார்த்தி நடிப்பில் அடுத்த வெளியீடாக ‘சர்தார் 2’ இருக்கிறது. அதனைத் தொடர்ந்து இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மார்சல்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இதனைத் தொடர்ந்து தெலுங்கு படமான ‘மேட்’ படத்தின் இயக்குநர் கல்யாண் சங்கர் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இதனை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இப்படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு தொடங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் கார்த்திக்கு நாயகியாக மீனாட்சி சவுத்ரி நடித்து வருவதாக தெரிகிறது. தற்போதுள்ள அரசியல் சூழலால், இப்படத்தை இன்னும் அறிவிக்காமல் இருக்கிறார்கள். இதில் கார்த்தியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் யோகி பாபு நடிக்கவுள்ளார்.

‘மார்சல்’ படப்பிடிப்பு தாமதம் ஆவதால், கல்யாண் சங்கர் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட திட்டமிட்டுள்ளார் கார்த்தி. அதனைத் தொடர்ந்து ‘மார்சல்’ படப்பிடிப்பை முடித்துவிட்டு, மீண்டும் கல்யாண் சங்கர் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் கார்த்தி.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here