மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த 62 வயதான கூலி தொழிலாளி ஹரிந்திரன், தனது மகளுக்கு விவாகரத்து ஆனதால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து ரத்த வாந்தி எடுத்த அவரை, உடனடியாக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி நேற்று ஹரிந்திரன் உயிரிழந்தார். இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.















