தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை இழந்த நிலையில், 108 இடங்களை வென்று தவெக தனிப்பெரும் கட்சியாக ஆட்சியை நெருங்கியுள்ளது. தேர்தல் முடிவுகள் வந்த அடுத்த நாளிலேயே காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியை விட்டு வெளியேறி, தவெக ஆட்சி அமைக்க அமைச்சர் பதவி உட்பட பல்வேறு நிபந்தனைகளுடன் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் நேற்று (மே 6) இரவு திமுக தொண்டர்கள் ராகுல் காந்திக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.















