களியக்காவிளையில் உள்ள குரியன்விளை பத்திரகாளி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் நேற்று நள்ளிரவு அக்கினி காவடி பூஜை நடைபெற்றது. இந்த விழாவில் சண்டிகா ஹோமம், நவக்கிரக ஹோமம், அக்கினி காவடி, கலை நிகழ்ச்சிகள், நாகரூட்டுபூஜை, சமூக பொங்காலை, பூப்படை போன்ற பல சிறப்பு பூஜைகள் நடந்தன. நள்ளிரவில் நடைபெற்ற தீமிதி நிகழ்ச்சியில், விரதமிருந்த ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்ச்சைக் கடனை செலுத்தினர்.














