கீரிப்பாறை பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக ரப்பர் பால் வெட்டும் தொழில் செய்து வந்த கேரளாவைச் சேர்ந்த சுரேஷ் (45) என்பவர், கடந்த 4ம் தேதி ரப்பர் தோட்டத்தில் சடலமாக கிடந்தார். பேச்சிப்பாறை கிராம நிர்வாக அலுவலர் அனிஸின் புகாரின் பேரில், சுரேஷின் உடல் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கேரளாவிலிருந்து 10 ஆண்டுகளுக்கு முன்பே வந்ததால், அவரது உறவினர்கள் யார் என்பது தெரியவில்லை. இதனால், சுரேஷின் சடலம் கடந்த 7 நாட்களாக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.














