தக்கலையில் டாரஸ் லாரி மோதி மாணவி அபினா உயிரிழந்த வழக்கில், தமிழ்நாட்டில் முதல்முறையாக ஓட்டுநர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாஷ் (30) என்ற லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கனிமவள லாரி மூலம் விபத்து ஏற்படுத்தினாலோ அல்லது குடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டாலோ, 105 பி. என். எஸ் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.














