மார்த்தாண்டம் அருகே பாகோடு பகுதியைச் சேர்ந்த ராஜசிங் என்பவரின் மகன் ஜெனிஷ் (19) மற்றும் அவரது நண்பர் ஷாபின் (21) ஆகியோர் பைக்கில் முளகுமூடு நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில், எதிரே வந்த டெம்போ ஒன்று அவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் ஜெனிஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஷாபின் காயமடைந்த நிலையில், தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














