உ.பி. விவசாயி மனைவி கணக்கில் ரூ.10 கோடி திடீரென வரவு வைத்த வங்கி – ஒரு ரூபாய் கூட எடுக்காததால் குவியும் பாராட்டு

0
21

உத்தர பிரதேச மாநிலம் மெய்ன்​புரி மாவட்​டம், தேவ்​கஞ்ச் கிராமத்​தில் வசிப்​பவர் பராஸ்​பன் பஹிலி​யா, விவ​சா​யி. இவரது மனைவி ரீடா. இவர் பேங்க் ஆப் இண்​டி​யா​வில் கணக்கு வைத்​துள்​ளார்.

அஷ்டமி விழாவை முன்​னிட்டு வங்​கிக்கு விடுமுறை என்பதால், அரு​கில் உள்ள ஏடிஎம் மையத்​துக்கு ரீடா சென்று தனது வங்​கிக் கணக்​கில் எவ்​வளவு பணம் உள்​ளது என்று பார்த்​தார். அப்​போது, ரூ.9 கோடியே 99 லட்​சத்து 49,588 இருந்​ததைப் பார்த்து ரீடா மலைத்​துப் போனார். ஏடிஎம்.மில் காட்டிய தொகையை மொபைல் போனில் வீடியோ​வாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளி​யிட்​டார்.

அது வைரலாகி​ விட்​டது. பின்​னர், தனது வங்​கிக் கணக்​கில் உள்ள பணத்தை யாரும் எடுக்கக் கூடாது என்று குடும்ப உறுப்​பினர்​கள் அனை​வரிட​மும் ரீடா திட்​ட​வட்​ட​மாகக் கூறி​விட்​டார். அதை அறிந்து அக்​கம் பக்​கத்​தினர் ரீடா​வின் நேர்​மை​யைப் பாராட்டினர்.

தகவல் அறிந்த கரீம்​கஞ்ச் பேங்க் ஆப் இண்​டியா கிளை மேலா​ளர் ரிஷி​காந்த் பாண்டே கூறும்​போது, “பணப் பரி​மாற்​றம் நடைபெறும்​ போதோ அல்​லது தொழில்​நுட்​பக் கோளாறு காரணமாகவோ தவறாக பணம் ரீடா வங்​கிக் கணக்​கில் பணம் வரவு வைக்​கப்​பட்​டிருக்​கலாம். வங்​கிக் கிளை திறந்​தவுடன் அது சரி செய்​யப்​படும்” என்​றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here