இன்று அனைத்துக் கட்சி கூட்டம்: மத்திய அரசு அழைப்பு

0
22

மேற்கு ஆசி​யா​வில் ஏற்​பட்​டுள்ள போர் காரண​மாக, நம் நாட்​டில் சமையல் எரி​வாயு (எல்​பிஜி) தட்​டுப்​பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் உணவகங்​கள் சிக்​கலை எதிர்​கொண்டு வரு​கின்​றன.

இதனிடையே, இதுகுறித்து விவா​திக்க அனைத்​துக் ​கட்சி கூட்டத்தை கூட்​டு​மாறு எதிர்க்​கட்​சித் தலை​வர்​கள் வலி​யுறுத்தி வந்​தனர். காங்​கிரஸ் மூத்த தலை​வர் ஜெய்​ராம் ரமேஷ், தற்போதைய மேற்கு ஆசிய மோதலை அரசு கையாளும் விதத்தை கடுமை​யாக விமர்​சித்​தார்.

இதற்​கிடை​யில், மாநிலங்​களவை​யில் பேசிய சிபிஐ(எம்) எம்​.பி. ஜான் பிரிட்​டாஸ், “2003ம் ஆண்டு இராக் மீதான அமெரிக்​கா​வின் போரைக் கண்​டித்து நாடாளு​மன்​றத்​தில் நிறைவேற்​றப்​பட்ட தீர்மானம் போல ஈரான் விவ​காரத்​தி​லும் அரசு தீர்​மானம் நிறைவேற்ற வேண்​டும்” என்று வலி​யுறுத்​தி​னார்.

தமிழகத்​தைச் சேர்ந்த காங்​கிரஸ் எம்​.பி.விஜய் வசந்த், சமையல் எரி​வாயு தட்​டுப்​பாடு மற்​றும் அதன் விலை​யில் நடப்​ப​தாகக் கூறப்​படும் முறை​கேடு​கள் குறித்து மக்​களவை​யில் ஒத்​திவைப்பு தீர்​மானத்தை கொண்டு வந்​தார். இந்​நிலை​யில், இன்று அனைத்து கட்சி கூட்​டத்​துக்கு மத்​திய அரசு அழைப்பு விடுத்​துள்​ளது. இதில் மேற்கு ஆசிய போரால் ஏற்பட்டுள்ள பிரச்​சினை​களுக்கு தீர்வு காண்​பது குறித்து விரி​வாக வி​வா​திக்​கப்​படும்​ எனத்​ தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here