குமரி மாவட்டம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள பார்வதிபுரம் மேம்பாலம் அருகே நள்ளிரவில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கண்டெய்னர் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் பெட்டி பெட்டியாக 8 கோடி ரூபாய் பணம் இருந்தது கண்டறியப்பட்டது. ரிசர்வ் வங்கியில் இருந்து கேரள மாநில வங்கி பரிமாற்றத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பணம் இது என விசாரணையில் தெரியவந்தது. உரிய ஆவணங்களை சரிபார்த்த பிறகு, அந்த பணம் போலீஸ் பாதுகாப்புடன் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.














