சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் நாகர்கோவிலில் உள்ள காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த தேர்தல் கட்டுப்பாட்டு பிரிவு அலுவலகம் இன்று திறக்கப்பட்டது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் இந்த அலுவலகத்தை திறந்து வைத்தார். மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இந்த கட்டுப்பாட்டு அறையில் தனித்தனியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.














