கேரளாவின் கும்பமேளா: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

0
17

மனதின் குரல் வானொலி உரையில் பிரதமர் மோடி நேற்று கேரள மாநில கும்பமேளா பற்றி பெருமையாகக் குறிப்பிட்டார்.

இதுகுறித்து பிரதமர் கூறியதாவது: கேரளத்​தின் திருச்​சூர் மாவட்டத்​தில் உள்ள ஒரு கிராமத்​தில் ஒரே ஒரு வயலில் மட்​டும் 570 வகை​யான நெற்​ப​யிர்​கள் சாகுபடி செய்​யப்​படுகிறது. இது விதைகளின் மரபைப் பாது​காக்​கும் பேரியக்​கம் ஆகும். உலகின் மிகப்​பெரிய அரிசி உற்​பத்​தி​யாள​ராக இந்​தியா உருவெடுத்திருக்கிறது.

15 கோடி டன்​களுக்​கும் மேலாக அரிசி உற்​பத்தி செய்​வது சாதாரண சாதனை கிடை​யாது. கேரளா​வின் திரு​நா​வாய் கிராமத்தில் பொன்​னானி நதிக்​கரை​யில் பழமை​யான பாரம்பரியம் பின்​பற்​றப்​படு​கிறது, அது​தான் மாமாங்​கம். இதை மகாமக மஹோத்​சவம் அல்​லது கேரள கும்​பமேளா என்கின்றனர்.

எந்​த அறி​விப்​பும் இல்​லாமல் கேரளா​வின் கும்​பமேளா அண்மையில் வெற்​றிகர​மாக நடத்​தப்​பட்டு உள்​ளது. இந்த விழாவுக்​காக விளம்​பரம் செய்​யப்​பட​வில்​லை. வாய்​மொழியாகவே தகவல்​கள் பரி​மாறப்பட்டன. இதன் ​மூலம் பெருந்திரளான மக்​கள் திரு​நா​வாய் கிராமத்​தில் கூடினர்.

வடக்கு முதல் தெற்கு வரை​யில் ஓடும் நதி​கள் வேறாக இருக்கலாம், கரைகள் வேறாக இருக்​கலாம், ஆனால் நம்​பிக்கை ஒன்​று​தான்​, இது​தான்​ இந்​தி​யா. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here