பணிக்கன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ஜெயகுமார் மற்றும் விக்டர் ராஜதாஸ் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்துள்ளது. கொடுத்த பணத்தை ஜெயகுமாரும் அவரது சகோதரரும், ஒப்பந்ததாரருமான விஜயகுமார் நேற்று முன்தினம் கேட்டபோது, விக்டர் ராஜதாஸ் காரை வேகமாக ஓட்டி விஜயகுமார் மீது மோதியுள்ளார். இதில் விஜயகுமார் உயிரிழந்தார். இதுகுறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிந்து விக்டர் ராஜதாசை கைது செய்துள்ளனர்.














