கொல்லங்கோடு நகராட்சியில் ஊழியர்களாக பணிபுரியும் விஷ்ணு (26) மற்றும் மணிகண்டன் நேற்று பணி முடிந்து கிராத்தூர் பகுதிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பூத்துறை பகுதியைச் சேர்ந்த விபின் ஓட்டி வந்த மற்றொரு பைக் நகராட்சி ஊழியர்களின் பைக் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த விஷ்ணு நெய்யாற்றின் கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மணிகண்டனுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. நித்திரவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














