மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டு, திட்டம் முடக்கப்படுவதாகக் கூறி, மத்திய பாஜக அரசை கண்டித்து கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் கிராம பஞ்சாயத்துக்கள் தோறும் காங்கிரஸ் பாதயாத்திரை நடத்துகிறது. நேற்று சூழால் ஊராட்சி ஊரம்பு ஜங்சனிலிருந்து ராஜேஷ்குமார் எம் எல் ஏ தலைமையில் காங்கிரசார் பாதயாத்திரை நடத்தினர். இந்த பாதயாத்திரையில் வட்டார காங்கிரஸ் தலைவர் விஜயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.














