ஹைதராபாத் இடைத்தேர்தலில் 49 சதவீத வாக்குப்பதிவு

0
12

ஹைத​ரா​பாத் ஜூப்ளி ஹில்ஸ் தொகு​தி​யின் பிஆர்​எஸ் கட்சி எம்​எல்ஏ மாகண்டி கோபி​நாத் மரணம் அடைந்​த​தால் இந்த தொகு​திக்கு நேற்று இடைத்​தேர்​தல் நடை​பெற்​றது.

4.01 லட்​சம் வாக்​காளர்​கள் கொண்ட இந்த தொகு​தி​யில் மொத்​தம் 58 வேட்​பாளர்​கள் களத்​தில் உள்​ளனர். எனினும் பிஆர்​எஸ் வேட்​பாளர் மாகண்டி சுனிதா (இவர் மறைந்த பிஆர்​எஸ் எம்​எல்ஏ மாகண்டி கோபி​நாத்​தின் மனை​வி), காங்​கிரஸ் வேட்​பாளர் நவீன் யாதவ், பாஜக வேட்​பாளர் தீபக் ரெட்டி ஆகியோர் இடை​யில்​தான் மும்​முனைப் போட்டி நில​வு​கிறது.

பொது​வாக ஜூப்ளி ஹில்ஸ் பகு​தி​யில் திரைப்​படத் துறை​யினர், தொழில​திபர்​கள், அரசி​யல்​வா​தி​கள் போன்​றோர் அதி​க​மாக வசிப்​ப​தால் இதனை விஐபி தொகுதி என்​றும் அழைக்​கின்​றனர். இந்​நிலை​யில் இயக்​குநர் ராஜமவுளி, நடிகர் கோபிசந்த் உள்​ளிட்ட பலர் வரிசை​யில் நின்று வாக்​களித்​தனர். இத் தொகு​தி​யில் நேற்று மாலை 6 மணி நில​வரப்​படி 49 சதவீத வாக்​கு​கள் பதி​வாகின. இன்​னும் பலர் வரிசை​யில் இருந்​த​தால் வாக்​குப் பதிவு அதி​கரிக்​கும் என கருதப்​படு​கிறது.

இந்​நிலை​யில் வாக்​குப் பதிவுக்கு பிந்​தைய கருத்​துக்​கணிப்பு முடிவு நேற்று மாலை வெளி​யானது. இதில் பிஆர்​எஸ் வேட்​பாளரை விட காங்​கிரஸ் வேட்​பாளர் 2 முதல் 5 சதவீத வாக்​கு​கள் கூடு​தலாக பெற்று வெற்றி பெறு​வார்​ என கூறப்​பட்​டுள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here