முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் நாள்பட்ட நோய்களால் ஏற்படும் மரணங்களை தடுக்க முடியும்: மருத்துவ நிபுணர்கள் கருத்து

0
10

உலகள​வில் ஏற்​படும் மரணங்​களில் நான்​கில் 3 பங்கு நாள்​பட்ட நோய்​களால் ஏற்​படு​கிறது. இதில் பெரும்​பாலானவற்றை வாழ்க்கை முறை மாற்​றம், குறித்த நேரத்​தில் பரிசோதனை மற்​றும் சிகிச்​சை, தடுப்​பூசிகள் போன்ற முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகள் மூலம் தடுக்க முடி​யும் என மருத்​துவ நிபுணர்​கள் கூறுகின்​றனர்.

இதுகுறித்து உலகின் முன்​னணி மருத்துவ நிறு​வன​மான ஜிஎஸ்​கே.​வின் மருத்​துவ இயக்​குநர் மற்​றும் அதி​காரி​கள் கூறுகை​யில், ‘‘வயது வந்தவர்களுக்கு இன்​பூளுயன்​சா, சுவாச நோய் தொற்று (ஆர்எஸ்​வி), அக்​கி, அம்​மை, நிமோனியா போன்ற நோய்​களுக்​கான தடுப்​பூசிகள் உள்​ளன. ஆனால், இந்த தடுப்​பூசிகளை பயன்​படுத்​து​வோர் எண்​ணிக்கை மிக​வும் குறைவு.

மக்​கள் ஆரோக்​கிய​மாக வாழ முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை முக்கியம். வயது வந்​தோர்​களை நாள்​பட்ட நோய்​களில் இருந்து காக்க தடுப்​பூசி​தான் மிகச் சிறந்த கவசம்.

ஆனால், இதற்கு பலர் முக்​கி​யத்​து​வம் அளிப்​ப​தில்​லை. குழந்​தைகளுக்கு தடுப்​பூசிகள் போட மத்​திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுப்​பது​போல், வயது வந்​தோருக்​கான தடுப்​பூசிகளை போடும் திட்​டங்​களை​யும் அரசுகள் சுகா​தார திட்​டத்​தில் கொண்டு வர வேண்​டும். இவ்​வாறு அவர்​கள்​ தெரி​வித்​தனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here