தேர்தல் வாக்குறுதியின்படி அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பணி ஓய்வின்போது பணிக்கொடை வழங்க வேண்டும், மே மாத விடுமுறையை ஒரு மாதமாக நீட்டிக்க வேண்டும், குழந்தைகளின் பாதுகாப்பிற்காக காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் மாலை நேர ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.














