திருமண நிகழ்ச்சிகளில் பெண்கள் தங்க நகைகள் அணிய கட்டுப்பாடு: உத்தராகண்ட் கிராமத்தில் விதி மீறினால் ரூ.50,000 அபராதம்

0
21

 உத்​த​ராகண்ட் மாநிலம், ஜான்​சர் – பவார் பகு​தி​யில் உள்​ளது கந்​தார் கிராமம். பழங்​குடி​யின மக்​கள் வசிக்​கும் இந்த கிராமத்​தில் சமீபத்​தில், பழங்​குடி​யின தலை​வர்​களின் கூட்​டம் நடை​பெற்​றது. அப்​போது திரு​மணம் மற்​றும் குடும்ப நிகழ்ச்​சிகளில் திரு​மண​மான பெண்​கள், தங்க நகைகள் அணிய கட்​டுப்​பாடு​கள் விதிக்​கப்​பட்​டன.

அதன்​படி, திரு​மணம் போன்ற நிகழ்ச்​சிகளில் திரு​மண​மான பெண்​கள், தங்​கத்​தில் கம்​மல், மூக்​குத்​தி, தாலி ஆகிய​வற்றை மட்​டும் அணி​ய​லாம். மற்​றபடி ஆடம்​பர​மான தங்க நகைகளை அணிய கூடாது. மீறி​னால் ரூ.50,000 அபராதம் விதிக்​கப்​படும் என்று கிராம தலை​வர்​கள் அறி​வித்​தனர்.

இதுகுறித்து கிராமத் தலை​வர்​கள் கூறிய​தாவது: திருமண நிகழ்ச்​சிகளில் பங்​கேற்​ப​தற்​காக ஏழை மக்​கள் கடன் வாங்கி செலவு செய்​யும் நிலை உள்​ளது. ஆடம்பர செலவு செய்​வது, தங்க நகைகளை போட்​டுக் கொண்டு தங்​கள் பணக்​காரத்​தனத்தை காட்​டு​வது போன்​றவற்றை தடுக்​கவே இந்த முடிவு எடுக்​கப்​பட்​டது.

ஆரம், நெக்​லஸ் போன்ற பெரிய பெரிய தங்க நகைகளை இனிமேல் திரு​மணம் போன்ற நிகழ்ச்​சிகளில் பெண்​கள் அணிய கூடாது. தங்​கத்​தின் விலை நாளுக்கு நாள் அதி​கரித்து வரு​கிறது. ஏழைகள் தங்​கத்தை வாங்க முடி​யாது. அதனால் அவர்​கள் கடன் வாங்​கி​யா​வது திரு​மணம் போன்ற நிகழ்ச்​சிகளில் பங்​கேற்க நினைக்​கின்​றனர். இது​போன்ற ஆடம்பர கலாச்​சா​ரத்​துக்கு முற்​றுப்​புள்ளி வைக்​கவே இந்த நடவடிக்கை எடுத்​துள்​ளோம்.

திரு​மணம் என்​பது புனித​மான நிகழ்ச்​சி. அது தங்​கள் செல்​வத்​தை, பணக்​காரத்​தனத்தை காட்​டும் மேடை​யாக மாற்​றக் கூடாது. சமூகத்​தில் சமத்​து​வத்தை கொண்டு வரவேண்​டும். அதற்கு இது​போன்ற கட்​டுப்​பாடு​கள் அவசி​யம். திரு​மணம் போன்ற நிகழ்ச்​சிகளில் ஏழை – பணக்​காரர் என்ற வேறு​பாடு இருக்க கூடாது. இந்த கட்​டுப்​பாடு​களை மீறி​னால் ரூ.50,000 அபராதம் விதிக்​கப்​படும்.இவ்​வாறு கிராமத் தலை​வர்​கள் கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here