21 மாவோயிஸ்ட்கள் சத்தீஸ்கரில் சரண்

0
16

சத்​தீஸ்​கர் மாவட்​டத்​தில் மாவோ​யிஸ்ட் ஒழிப்பு பணியை பாது​காப்பு படை​யினர் தீவிர​மாக மேற்​கொண்​டனர். இதன் காரண​மாக பல மாவோ​யிஸ்ட்​கள் என்​க​வுன்ட்ட​ரில் சுட்​டுக் கொல்​லப்​பட்​டனர். இந்த மாதத்​தின் 3-வது வாரத்​தில் மட்​டும் 238 மாவோ​யிஸ்ட்​கள் சரண் அடைந்​தனர்.

இந்​நிலை​யில் சத்​தீஸ்​கரின் பஸ்​தார் பகு​தி​யில் உள்ள 13 பெண்​கள் உட்பட 21 மாவோ​யிஸ்ட்​கள் போலீ​ஸார் முன்பு ஆயுதங்​களை ஒப்​படைத்து விட்டு நேற்று சரண் அடைந்​தனர்.

இதுகுறித்து பஸ்​தார் ஐ.ஜி சுந்​தர்​ராஜ் கூறும்​போது, ‘‘மாவோ​யிஸ்ட்​கள் வன்​முறையை கைவிட்​டு, இயல்பு வாழ்க்​கைக்கு திரும்​பி​யுள்​ளனர். இவர்​கள் சமூகத்​துடன் இணைந்து வாழ தேவை​யானதை பஸ்​தார்​ ​காவல்​ துறை செய்​யும்’’ என்​றார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here