​வி​நாயகர் சிலை ஊர்வல விபத்துகளில் 6 பேர் உயிரிழப்பு

0
68

ஆந்​திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்​டத்​தில் உள்ள நரசாபுரம், தூர்ப்பு தூள்ளு கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை விநாயகர் சிலைகளை ஏரி​யில் கரைக்க டிராக்​டரில் ஊர்​வல​மாக கொண்டு சென்​றனர்.

வழி​யில் டிராக்​டரை டிரைவர் ஓரமாக நிறுத்​தி​விட்டு தண்​ணீர் குடிக்​கச் சென்​றார். அப்​போது கூட்​டத்​தில் இருந்த ஒரு சிறு​வன் டிராக்டரில் ஏறி அதை ஓட்ட முயன்​றார். இதில் டிராக்​டர் தாறு​மாறாக ஓடி 4 பேர் மீது ஏறி இறங்​கிய​தில் நால்​வரும் பரி​தாப​மாக உயிரிழந்​தனர்.

இது​போல் அல்​லூரி சீதா​ராம ராஜு மாவட்​டத்​தில் விநாயகர் சிலை ஊர்​வலத்​தில் கார் புகுந்​த​தில் 2 பக்​தர்​கள் உயி​ரிழந்​தனர். 4 பேர் காயம் அடைந்​தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here