ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காவல் துறை செல்வப்பெருந்தகையை விசாரிக்க தவறிவிட்டது: பகுஜன் சமாஜ் வாதம்

0
86

ஆம்​ஸ்ட்​ராங் கொலை வழக்​கில் செல்​வப்​பெருந்​தகை​யிடம் விசா​ரிக்க காவல்​ துறை தவறி​விட்​டது என பகுஜன் சமாஜ் தரப்​பில் உயர்​நீ​தி​மன்​றத்​தில் வாதிடப்​பட்​டது. பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலை​வ​ராக இருந்த ஆம்​ஸ்ட்​ராங் கடந்​தாண்டு ஜூலை 5-ம் தேதி தனது வீட்​டின் அருகே வெட்​டிக் கொல்​லப்​பட்​டார். இந்த வழக்​கில் இது​வரை 27 பேர் கைது செய்​யப்​பட்டு சிறையில் அடைக்​கப்​பட்​டுள்​ளனர்.

இந்த வழக்கை செம்​பி​யம் காவல் துறை​யினர் நியாய​மாக விசா​ரிக்​க​வில்லை என கூறி, விசா​ரணையை சிபிஐக்கு மாற்​றக் கோரி பகுஜன் சமாஜ் கட்சி மாநில பொது செய​லா​ள​ரும், ஆம்​ஸ்ட்​ராங்​கின் சகோ​தரரு​மான கீனோஸ் ஆம்​ஸ்ட்​ராங் சென்னை உயர்​ நீ​தி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​திருந்​தார்.

இந்த வழக்கு நீதிபதி வேல்​முரு​கன் முன்பு விசா​ரணைக்கு வந்​தது அப்​போது, காவல்​ துறை தரப்​பில் பதில் மனுதாக்​கல் செய்யப்பட்​டது. அதில், “காவல் துறை நியாயமான முறை​யில் விசா​ரணை மேற்​கொண்​டது. ஆம்​ஸ்ட்​ராங்​கின் மனை​வியே விசாரணை திருப்தி அளிப்​ப​தாக தெரிவித்​துள்​ளார். இது அரசி​யல் கொலை இல்​லை.

வழக்​கில் விசா​ரணை முடிந்து குற்​றப்​பத்​திரிகை தாக்கல் செய்​யப்பட்டுவிட்​ட​தால், இம்மனுவை தள்​ளுபடி செய்ய வேண்​டும்” என கூறப்​பட்​டிருந்தது. அப்​போது, மனு​தா​ரர் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர், “கைது செய்​யப்​பட்​ட​வர்​களிடம் பெற்ற வாக்​குமூலத்​தின் அடிப்​படை​யில் மட்​டுமே காவல்​துறை அவசர கதி​யில் குற்​றப்​பத்​திரிக்கை தாக்​கல் செய்​துள்​ளது.

ஆம்​ஸ்ட்​ராங் மனை​வி​யிடம் மேற்​கொண்ட சாட்சி விசா​ரணை​யின் அடிப்​படை​யில், தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை​யிடம் விசா​ரணை மேற்​கொள்ள காவல்​துறை தவறி​விட்​டது” என வாதிட்​டார்.

தொடர்ந்து நீதிபதி பிறப்​பத்த உத்​தர​வில். “கொலையை நேரில் பார்த்த சாட்​சி​யான ஆம்​ஸ்ட்​ராங்​கின் சகோ​தரர் வீரமணி முன்​னிலை​யில் கைது செய்​யப்​பட்​ட​வர்​களின் அடை​யாள அணிவகுப்பு நடத்​தாதது கடும் அதிருப்தி அளிக்​கிறது” என குறிப்​பிட்டு வழக்​கின் தீர்ப்​பை தேதி குறிப்​பி​டா​மல்​ தள்​ளிவைத்​தார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here