பேச்சிப்பாறை:  முந்திரி ஆலை தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்

0
485

பேச்சிபாறை, கேம்ப் ரோடு பகுதியில் செயல்பட்ட முந்திய ஆலை சில மாதங்களுக்கு முன் மூடப்பட்டது. இதில் தகுதியுடைய 60 பேருக்கு பணிக்கொடையை நிறுவனம் வழங்கவில்லை. தொழிலாளர்கள் கேட்ட போது ஜூன் 1ஆம் தேதிக்குள் தருவதாக உறுதியளித்தனர். நேற்று மதியம் வரை பணம் கொடுக்காததால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். பேச்சிபாறை போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் மாலை 4 மணி அளவில் ஆலை நிர்வாக பிரதிநிதி வந்து பேச்சுவார்த்தை நடத்தி, வரும் 30ம் தேதி பணிக்கொடை வழங்குவதாக உறுதி அளித்தார். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here