விடுமுறை நாளில் வழக்கறிஞர்கள் வேலை செய்ய விரும்புவதில்லை: தலைமை நீதிபதி வேதனை

0
250

விடுமுறை நாட்களில் வழக்கறிஞர்கள் வேலை செய்ய விரும்புவதில்லை என தலைமை நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாய் மற்​றும் நீதிபதி அகஸ்​டின் ஜார்ஜ் மாசிஹ் அமர்வு முன்பு நேற்று வழக்கு ஒன்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, வழக்​கறிஞர் ஒரு​வர் கோடை விடு​முறைக்​குப் பிறகு மனுவை பட்​டியலிடு​மாறு நீதிபதி அமர்​விடம் வலி​யுறுத்​தி​னார்.

இதைக்​கேட்டு கோபம் அடைந்து தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாய் கூறிய​தாவது: வழக்​கறிஞர்​கள் கோடை விடு​முறை நாட்​களில் வேலை செய்ய விரும்​புவ​தில்​லை. ஆனால், வழக்​கு​கள் தேங்​கு​வதற்கு நீதித் துறை​தான் காரணம் என்று பொத்​தம் பொது​வாக குற்​றம்​சாட்​டப்​படு​கிறது.

முதல் ஐந்து நீதிப​தி​கள் விடு​முறை அமர்​வில் தொடர்ந்து பணி​யாற்​றுகிறார்​கள். ஆனால், வழக்கு நிலு​வை​யில் உள்​ளதற்கு நாங்​கள்​தான் காரணம் என்​கின்​றனர். உண்​மை​யில் விடு​முறை நாளில் வேலை செய்ய விரும்​பாத வழக்​கறிஞர்​கள்​தான் அதற்கு காரணம். இவ்​வாறு பி.ஆர்​.க​வாய் தெரி​வித்​தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here