கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு அரிசி கடத்திச் செல்லப்பட்டு வருகிறது. இதனை போலீசார் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் குமரி மாவட்டத்திலிருந்து அரிசி கடத்தியதாக 126 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 312 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 217 டன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று தெரிவித்தனர்.