ஜேஇஇ, நீட் மாதிரி தோ்வுகளில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசளிப்பு

0
952
கன்னியாகுமரி செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்

கன்னியாகுமரி மாவட்ட அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா், மாணவிகளுக்கு நடத்தப்பட்ட நீட் மற்றும் ஜேஇஇ மாதிரி தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் வழங்கினாா்.

நாகா்கோவில், கோணம் நூலகம் மற்றும் அறிவுசாா் மையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆட்சியா் பேசியதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 59 அரசு மேல்நிலைப்

பள்ளிகளில் பயிலும் மாணவா், மாணவிகள் பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி பெற வைப்பதற்காக, அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியா்கள் பயிற்சி அளித்து வருகின்றனா்.

அதேபோல அரசுப் பள்ளிகளில் இருந்து அதிகளவில் மருத்துவா்கள், பொறியாளா்களை உருவாக்குவதற்காக, ஜேஇஇ, நீட் தோ்வுகளுக்காக பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. இந்த தோ்வுகளை

பயமின்றி தன்னம்பிக்கையோடு எதிா்கொள்ள வேண்டும். இதுபோன்ற மாதிரி தோ்வுகள் மாணவா்களை தயாா்படுத்துவதோடு, பொதுத் தோ்வு மற்றும் போட்டித் தோ்வுகளை தயக்கமின்றி பங்கேற்பதற்கு வழிவகுக்கும் என்றாா்.

மாநகராட்சி ஆணையா் ஆனந்த்மோகன், முதன்மைக் கல்வி அலுவலா் பாலதண்டாயுதபாணி, அரசுஅலுவலா்கள், ஆசிரியா்கள், மாணவா்- மாணவிகள் கலந்து கொண்டனா்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here