நாகர்கோவிலில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

0
121

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி போலீசார் நேற்று புளியடி 4 வழிச்சாலை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த ஒரு வரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அறுகு விளை பகுதியை சேர்ந்த கனகவேல் (வயது 22) என்பதும், கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 15 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here