வில்லுக்குறி: மாஜி பெண் கவுன்சிலர் முழு உடல் தானம்

0
246

மாடத்தட்டுவிளை பகுதியை சேர்ந்த 65 வயதான வில்லுக்குறி பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் மேரி குளோரிபாய் உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் காலமானார். ஏற்கனவே பதிவு செய்திருந்தபடி, அவரது இரண்டு கண்களும் மருத்துவர் குழுவினரால் தானமாக பெறப்பட்டன. இதைத் தொடர்ந்து, அவரது உடலும் தானமாக வழங்க முடிவு செய்யப்பட்டு, ஆலய திருப்பலிக்கு பிறகு பங்கு பணியாளர் மரியராஜேந்திரன் முன்னிலையில் குமரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று ஒப்படைக்கப்பட்டது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here