விளவங்கோடு தொகுதியில் தேர்தல் நாளான நாளை கேரளாவில் இருந்து காங்கிரஸ் கட்சியினர் ரவுடிகளை இறக்கி, தமிழக-கேரள எல்லைப் பகுதிகளில் கலவரத்தை தூண்டி, கள்ள ஓட்டு போட திட்டமிட்டுள்ளதாக பாஜக வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் சஜி, விளவங்கோடு சட்டமன்ற தொகுதி தேர்தல் அதிகாரியிடம் நேற்று புகார் அளித்தார். தேவிகோடு, பளுகல், மலையடி, வன்னியூர், புலியூர் சாலை போன்ற ஊராட்சிப் பகுதிகளில் இந்த சதி நடப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.














